முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
12. இட்டலிங்க அபிடேக மாலை
ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு
        முயர்புரா தனசரிதமோ
    டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை
        யொண்சுவத் திகமேற்றுபு
சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு
        சுவத்திகா ரோகணமுநூல்
    சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந்
        தொல்விபூ திப்பட்டமும்
மாகலச நீராட்டு கலசாபி டேகமு
        மருவுசிவ நோக்குவிக்கும்
    வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு
        வனைசுவா யதமுமெனுமேழ்
ஆகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(6)

6. வீர சாமானியர்க்குத் தூலதனுவிற் செய்யப்படும் இட்டலிங்க எழுவகைத் தீக்கைகளைக் கூறுவதிப்பாட்டு. ஓகை-உவகை. புராதன சரிதம்-பழைய வரலாறு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்