1. சோணசைலமாலை |
|
|
வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே வேண்டினர் வினைகொடு புணரா நனைமலர் புனைநின் றிருவடி யடைவா னாடொறும் வேண்டில ருலகர் கனையிருள் கரந்த விடமறிந் துணப்போங் காட்சியிற் புனக்கிளித் தொகுதி தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(46) |
|
|
மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன் மறுப்பவு முடிமிசை யிருத்தும் பூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப் புகலினு மென்கொனீ யிரங்காய் ஓங்குறு மண்ட கோளகை யளவு முயர்ந்துமோர் மழவிடை முதுகில் தாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(47) |
|
|
ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு மின்சொலு மிந்தியப் பகைவெல் வீரமு மருளி யெனதுவெம் பிறவி விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர் சாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(48) |
|
|
|
46. அருளாற்புணர்க்கப்பட்ட அடியென்பார் வினைகொடு புணராத் திருவடி யென்றார். கொண்டு என்பது ஆல் உருபின்மேற்று. கனை-நெருக்கம். இருட்கு இடமாகலின் முழையை இருள்கரந்த விடமென்றார். கனையிருள்-பேரிருள். கரந்த-மறைந்த. 47. நாவலூர்ப் புலவர் மறுத்தது திருவதிகையின் அருகுள்ள சித்தவட மடத்தில். மிழற்றும்-இசைபாடும். மழவிடை-இளமை பொருந்திய காளை. 48. எறுழ்வலி-ஒரு பொருட் பன்மொழி. இந்தியம் என்பது ஐம்பொறிகள் அவை மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. பிறவி துன்பத்துக் கிடஞ்செய்தலால் ‘வெம்பிறவி’ என்றார். ஈரம்-இரக்கம். ஆரம்-சந்தனம். தடிந்து-வெட்டி.
|
|
|
|