1. சோணசைலமாலை |
|
|
தொகைமிகு மமரர் முனிவரர் பரவித் தொழுதகை யொடுவிரை கமழ்பூம் புகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப் புழுகுநீ யணிதல்கண் டுவந்தேன் குகைமிகு வாயிற் சோதிமா மரஞ்சேர் குளிர்மதி விழுங்கவாய் வைத்த தகைமிகு மூரற் றிரளைநேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(49) |
|
|
சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ் சேர்ப்பது தகுமுனக் கிசைவண் டினம்படு மலரி னகவித ழொடுபுல் லிதழுமொன் றுதலுல குடைத்தே மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு மனங்குழைந் துமையவள் களபத் தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(50) |
|
|
வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன் மணிப்பணி பெரும்புவி யாட்சி ஆம்பரி சலவென் றுன்பத மருவி னன்றியென் கவிகளென் கவிகள் காம்பரி முரண்மும் மதகரி வளைத்த கைவிட மோதலாற் கதிர்த்தேர்த் தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(51) |
|
|
|
49. முன் ஒரு புழுகுபூனை இச்சோணசைலப் பிரானுக்குச் சாந்தெனப் புழுகையப்பி வசித்த புண்ணியத்தால், அயோத்தியில் ஏமாங்கதவேந்தனாகி உதித்துப் பூர்வசன்ம வாசனையால் ஈங்கெய்தி, அத்தொண்டையே இயற்றிச் சிவபதமெய்திய ஐதிகம்பற்றி நடக்கும் அம் மகோற்சவதரிசனங் கிடைக்கப்பெற்ற உவகைமேலீட்டால் துதித்தவாறு. சோணசைல நாதருக்குக் குகை திருவாய்; சோதி மரம் அன்னபாத்திரம்; சந்திரன் பாற்றிரளன்னம் போல்வன. சோதி மரம்-இரவில் ஒளிகால்வதாகிய ஒருமரம். மூரல்திரளை-உணவு உருண்டை. 50. கோபத்தை அறவே அடக்கியொழித்த நிலையுடையவர்களைச் ‘சினம் படுமுளங்கொன்றவர்’ என்பர். சாக்கிய நாயனார் புறத்தே தொண்டு செய்யாது அகத்தொண்டு செய்தமையான் அவரை ‘மனம்படுமடிமை யுளன்’ என்றார். உள்ளத்தவன் என்பது ‘உளன்’ என நின்றது. 51. ஆம் பரிசு-விருத்திக்குரிய தன்மையன. மருவின்-உட்பொருளாகி நிலவின். காம்பு மோதலால் எனவியையும். காம்பு-மூங்கில். அரிமுரண்-சிங்கத்தோடு மாறுபடுகின்ற. வாம்பரி-தாவுகிற குதிரை. துணுக்கென்று-விரைவாக.
|
|
|
|