| 15. நிரஞ்சனமாலை |
|
| |
அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந் திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல் கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து பொங்கெரி வெந்திர யத்தூ டிருப்பப் பொருந்துவதே.
|
(5) |
| |
| |
சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர் நித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே அத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய் மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே.
|
(6) |
| |
| |
கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி ஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில் அண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே,
|
(7) |
| |
| |
காயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு ஞேயங்க ளாதி முதனடு வீறி னினக்கயலே ஆயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே.
|
(8) |
| |
| |
சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய் மெத்தென் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக் கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே.
|
(9) |
| |
| |
வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே யான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய் கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவும் மான்குறிக் குங்க ணுமைபங்க னேயென்கைம் மாணிக்கமே.
|
(10) |
| |
| |
பிரமமுந் தானு மயலென் றருச்சிக்கும் பேதநிலை தருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென் றருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா றிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே.
|
(11) |
| |
|
| |
5. கண்ணி-மாலை. முனிந்து-வெறுத்து. வெந்நிரயம்-கொடிய நரகம். 6. மெய்த்த-மெய்ப்பொருளாகவுள்ள, 7., கண்ணில் இரவி-கண்ணில் கதிரவன், உயிர்ப்பு-மூச்சுக்காற்று, வளி-காற்று. 8. காயம்-உடல் கரணம்-அந்தக்கரணம். அர்ப்பிப்பல்-படைப்பேன். அவிச்சை-பொய். 9. கறைக்கண்டன்-கறை பொருந்திய கழுத்தையுடையவன். 10. வான்குறித் தெய்யுங்கணை-விண்ணைக் குறித்துச் செலுத்தப்படும் அம்பு. மகரக்குழை-மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட காதணி. மான் குறிக்கும்-மானைப்போன்று விளங்கும். 11.1, அயல்-வேறு. நானாகி நின்றனை-நீ நானாகி நின்றாய்.
|
|
|
|