15. நிரஞ்சனமாலை |
|
|
கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன் சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கும் மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.
|
(12) |
|
|
மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல் விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு நண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக் கண்ணுங் கருத்துங் கலந்துநின் றாயென்கைக் கண்ணுதலே.
|
(13) |
|
|
நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால் சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ ஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே.
|
(14) |
|
|
ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை சென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்கம் என்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண் மின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே.
|
(15) |
|
|
உறங்குது மென்றுறங் காநிற் பவரிலை யோங்கொளியாய்ப் பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகாண் நிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே.
|
(16) |
|
|
குருவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு திருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கண் பொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென் கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே,
|
(17) |
|
|
|
12. நாப்பண்-நடு. 13. பவநாசம்-பிறப்பு அழிந்தொழிய. காகத்தின் இரு கண்கட்கும் கருமணி ஒன்றே என்பர். 14. ஆகம்-உடல். 15. மின்திரண்டால் அன்ன-மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போன்ற. 16. பிறங்கும்-விளங்கும். 17. கருவிற்கு-பிறவிக்காரணப் பொருளுக்கு.
|
|
|
|