| 15. நிரஞ்சனமாலை |
|
| |
நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய் கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே.
|
(24) |
| |
| |
உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத் தொடர்ந்து நுகருநன் ஞானக் கரத்திடை தோன்றுவைமால் கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே.
|
(25) |
| |
| |
யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய் நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவும் ஆனா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய் வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே
|
(26) |
| |
| |
உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியாய் இலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார் விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே.
|
(27) |
| |
| |
ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப நானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைத்தழிதல் வானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந் தீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே.
|
(28) |
| |
| |
உருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய் அருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க் கருவன் றுலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே.
|
(29) |
| |
|
| |
24. பொய்யினெறி செல்லாது-பொய்யான நெறிகளிலே செல்லாமல்.25. விடயங்கள் உண்டு உழலாது-விடயங்களை நுகர்ந்து சுழலாமல்.26. ஆனாதுயர்ந்த-அளவுபடாமல் மேலோங்கிய 27. ஒருவாது-நீங்காமல். தெரிப்பது-தெரியப்படுத்துவது. 28. ஆனந்தவாரிதி-இன்பக் கடல், நந்து-அழிந்துபோகிற. 29. மருவு அங்கம்-பொருந்திய உடல். உள்ளம்-மனம்.
|
|
|
|