முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும்
நள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க
உள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்
துள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே.
(30)
அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்
பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்
கழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற்
கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே.
(31)

30. விள்ளேன்-விட்டு நீங்கேன் நள்ளேன்-பொருந்தேன். உள்ளேன்-நினையேன். 31.சங்கமம்-அடியார். கமர் உகுத்தேன்-நிலவெடிப் பிற் சிந்தினேன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்