16. கைத்தலமாலை |
|
|
[கைத்தலம் என்பது கையாகிய இடம். சிவபிரானுடைய திருவுருவத்தைத் தாங்கப் பெற்ற கை மிகச் சிறப்புடையதாகலின் அக்கையைக் குறித்துப் பாடப்பெற்றது இக்கைத்தலமாலை. இம்மாலை கலிநிலைத்துறை என்னும் பாவால் பத்துப் பாடல்களால் அமைந்துள்ளது.] |
|
|
|
ஒருவிகற்பவெதுகைக் கலிநிலைத்துறை |
|
|
முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர் பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன் மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
|
(1) |
|
|
அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயும் முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன் பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற் கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
|
(2) |
|
|
தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பான் உன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
|
(3) |
|
|
தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தாரம் அன்ன மார்வய லம்பல நமன்றமர் வராமல் கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
|
(4) |
|
|
கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பான் உன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி மன்னு மோர்பவப் பிணிமருந் தெளிதுவந் திருப்ப என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
|
(5) |
|
|
|
1. பன்னும்-கூறும். மின்-மின்னல் போன்ற ஒளி. சடாடவி-சடைக்காடு. 2. ஏனம்-பன்றி. பீடம்-இருக்கை. கோடற்கு-கொள்ளுதலுக்கு. 3. வந்தனை புரிபவன்-மார்க்கண்டேயன்-உன்னி-உயிர்கவர எண்ணி. மன்னும்-நிலைபெற்ற. 4. அம்பலம். திருத்தில்லை. கன்னன்மாமதன்-கரும்பு வில்லையுடைய காமன். 5. பவப்பிணி மருந்து-பிறவி நோய்க்கு மருந்தாயிருக்குங்கடவுள்.
|
|
|
|