முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சாற்றுமியோ காங்கஞ் சரண னயிக்கியனாம்
போற்றிநீ காணென்று போதித்த தேசிகனோ.
(11)
அங்க நவவிதமு மந்தநவ லிங்கமொடு
தங்கு மெனவெனக்குச் சாற்றும் பெருமானோ.
(12)
விழுங்கல் பருகலொடு மெல்லலா சாரம்
ஒழுங்கிற் குருசிவமு முற்றிடுமிங் கென்றானோ.
(13)
சோகிய லேகியமுஞ் சொன்ன விவற்றறிவும்
ஏகியுறும் பின்மூன் றிலிங்கத்து மென்றானோ.
(14)
இந்தக்கா யார்ப்பணங்க ளிட்டலிங்கத் தென்றெனக்குச்
சந்தப் படவுரைத்துத் தந்தசிவ ஞானியோ.
(15)
பீடமிடை வட்டம் பெருங்கோ முகநாளம்
ஆடலுறு கோளகமா சாராதிக் கென்றானோ.
(16)
நாற்றஞ் சுவையுருவ நல்லூ றொலிநிறைவு
சாற்றுஞ் சடுலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
(17)
வேர்முதலாங் கந்தம் விளங்கு மரமுதலாங்
கூர்மணமா சாரங் குருவினிலா மென்றானோ.
(18)
தளிராதி கந்தமுகை தான்முதலாங் கந்தம்
ஒளிரார் சிவசரத்தி னாற்றிடுமிங் கென்றானோ.
(19)
காய்முதலாங் கந்தமெலாங் காசில்பிர சாதத்துந்
தூய்மலிமா லிங்கத்துந் துன்னுமெனச் சொன்னானோ.
(20)
மதுரந் துவர்கார்ப்பு வண்புளிகைப் பெல்லாஞ்
சதுரென் றிருத்தியவா சாராதிக் கென்றானோ.
(21)
பொன்மைவெண்மை பச்சைசெம்மை போந்த கருமையெலாம்
நன்மையவா சாராதி நண்ணுமென்ற நாயகனோ.
(22)

15. காயார்ப்பணம்-உடலை அர்ப்பித்தல். 17. நாற்றம்-மணம். ஊறு-பரிசம்.19. 20. தூய்மலி-தூய்மை மிகுந்த. துன்னும்-பொருந்தும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்