| 18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
| |
வன்மைமென்மை வெம்மைதண்மை வாய்ந்த மிசிரமெலாஞ் சின்மையவா சாராதி சேர்ந்துகொளு மென்றானோ.
|
(23) |
| |
| |
கஞ்ச நரம்புதோல் கண்டகுழ லாதியொலி அஞ்சொலிவை யெல்லாமவ் வாறுமுறு மென்றானோ.
|
(24) |
| |
| |
மணமுதலா மைந்து வகைநிறைவெ லாமும் நணுமுறையா சாராதி நாடிலெனச் சொன்னானோ.
|
(25) |
| |
| |
இம்முறையா றாறா மிலங்குகர ணார்ப்பிதமென் றெம்மறிவு கொள்ள வியம்புசிவ ஞானியோ.
|
(26) |
| |
| |
தொட்டறிந்திங் கொன்றைத் துணிந்து நுகர்ந்துமகிழ்ந் திட்டமைந்து நிற்கு மிலிங்கங்க ளென்றானோ.
|
(27) |
| |
| |
கூறுமிவை யாவினுமிக் கொள்கை பெறுமிலிங்கம் ஏறு மிரட்டுநூற் றெட்டாகு மென்றானோ.
|
(28) |
| |
| |
உருவஞ் சுவைநிறைவா யோங்கர்ப் பிதங்கள் மருவுந் திறஞ்சொன் மயிலை மலைவிளக்கோ.
|
(29) |
| |
| |
சுத்தசித்த மோடுபிர தித்தமெனத் தோன்றுபுபா சத்தமுத்த மாக்குபிர சாதமரு ணாயகனோ.
|
(30) |
| |
| |
அங்கலிங்க சத்திபத்தி யத்தமுக வர்ப்பிதசே டங்களிவை யட்ட சயிலமெனச் சொன்னானோ.
|
(31) |
| |
| |
குசித்த மழிந்து குடும்பநோய் மாற்றுஞ் சுசித்தமதி லாசாரந் தோன்றுமெனச் சொன்னானோ.
|
(32) |
| |
| |
குபுத்தி யழிந்து குருநெறியி னிற்குஞ் சுபுத்திதனி னிற்குஞ் சுடர்குருவிங் கென்றானோ.
|
(33) |
| |
| |
ஆங்கார மில்லா நிராங்கார வத்தமதில் நீங்கா திலகு நிகழ்த்துசிவ மென்றானோ.
|
(34) |
| |
|
| |
23. மிசிரம்- கலப்பு. 28. இரட்டும் நூற்றெட்டு-இருநூற்றுப் பதினாறு. 29. மயிலைமலை-மயிலம். 32. குசித்தம்-நல்லதல்லாத மனம். சுசித்தம்-நல்லமனம். 33. குபுத்தி-தீயஅறிவு. சுபுத்தி-நல்லறிவு. 34. ஆங்காரம்-அகங்காரம்: நான் என்னும் ஆணவம். நிராங்காரம்-அகங்காரமற்ற தன்மை.
|
|
|
|