18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
கமன மழிந்து கறையற்று நிற்குஞ் சுமனமதி னின்றிலகுந் தூயசர மென்றானோ.
|
(35) |
|
|
மெய்ஞ்ஞான மாகி மிளிரும் பிரசாதஞ் சுஞ்ஞான வத்தமதிற் றோன்றுமெனச் சொன்னானோ.
|
(36) |
|
|
துற்பாவ நீங்கித் துணிவுபடு மத்துவித சற்பாவ மாலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
|
(37) |
|
|
ஆதார பீடங்க ளாறினுமவ் வாறிலிங்கம் மீதாக வைத்து விளங்கச்செய் வித்தகனோ.
|
(38) |
|
|
ஆறு முகங்களுமவ் வாறுசா தாக்கியமும் ஆறு வருணமுமா மாறிலிங்க மென்றானோ.
|
(39) |
|
|
பத்தனொடு மாயேசன் பார்ப்பரிய வாசாரம் மெய்த்தகுரு நான்கும் விளங்குகுரு வென்றானோ.
|
(40) |
|
|
பிரசா தியுமப் பிராணலிங்கி தானும் உரைசால் சிவசரமு மோங்கிலிங்க மென்றானோ.
|
(41) |
|
|
ஒழிந்தவங்க லிங்க மொருநான்கு நம்பால் எழுந்தருளுஞ் சங்கமமென் றின்பந் தருவானோ.
|
(42) |
|
|
உருவ முருவருவ முற்றறிதற் கெட்டா அருவமென நின்றிடுமவ் வாறுமெனச் சொன்னானோ
|
(43) |
|
|
மாசுதரு தூலாதி மானவிசு வாதியே ஆசி றியாகாங்க மாதியா மென்றானோ.
|
(44) |
|
|
விரிந்தன வெலாமும் விரிந்தமுறை சென்றே ஒருங்கியங்க லிங்க வுபயமா மென்றானோ.
|
(45) |
|
|
|
35. கறையற்று-குற்றமற்று. 36. சுஞ்ஞானம்-நல்லஞானம். 37. துற்பாவம்-தீயமன வியற்கை. சற்பாவம்-நல்ல மனவியற்கை. 38. மீதாக-மேலாக. 40. மெய்த்தகுரு-உண்மையான சற்குரு. 41. உரைசால் புகழமைந்த. 42.எட்டா-கண்டுணர முடியாத. 43. உற்றறிதற்கு-பொருந்தியறிதற்கு. 44. மாசு தரு-குற்றத்தைக் கொடுக்கிற. ஆசில்-குற்றமில்லாத. 45. ஒருங்கி-ஒடுங்கி.
|
|
|
|