18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
கடத்தி னுபாதியா காயமுற்ற வாபோல் அடுத்த வுபாதியா லங்கலிங்க மென்றானோ.
|
(46) |
|
|
தங்கு மிலிங்கமாந் தற்பதமத் தொம்பதமே அங்க மயிக்கிய மசிபதமென் றாண்டானோ.
|
(47) |
|
|
ஆக முயிர்துரிய னாய்நின்ற போதெமைத்தான் சோகமனத் தானாகத் தோன்றும் பெருமானோ.
|
(48) |
|
|
அமைத்தபரஞ் சுத்தத் தசுத்தமதிற் சீவன் தமப்பகுதி யிற்றோன்றுந் தத்துவங்க ளென்றானோ.
|
(49) |
|
|
நிரஞ்சன சூனியமா நிட்களத்திற் சித்து வருஞ்சுடர்சின் னாதாதி வாய்ப்பவெனச் சொன்னானோ.
|
(50) |
|
|
மூலசித்து நாதாதி மூன்றும் புணர்ந்தாகு மாலகற்றுஞ் சோதிமய மாலிங்க மென்றானோ.
|
(51) |
|
|
அகராதி மாலிங்கத் தாகியவை கூடித் தகவாமோங் கார சதாசிவமா மென்றானோ.
|
(52) |
|
|
அந்தச் சதாசிவத்தி னைம்முகத்து மைம்பூதம் வந்துற் றிதயத்தான் மாவருமிங் கென்றானோ.
|
(53) |
|
|
அப்பூதம் பஞ்சீ கரித்திருபத் தைந்தாகி மைப்பூணு மான்மாவை மன்னியிடு மென்றானோ.
|
(54) |
|
|
ஆணவத்தான் மூடனா மாருயிர்க்கு முன்வினையால் மாண வளிக்குமிறை மாயைவடி வென்றானோ.
|
(55) |
|
|
மேலைவினை யாலுழலு மெய்யுயிர்க்குப் பாகமலக் காலமுறச் சுத்தக் கரணமா மென்றானோ.
|
(56) |
|
|
கூறுமனச் சுத்தமுறக் கொண்டுபிண்ட நாமத்தை நூறு தலநெறியு நோக்குமெனச் சொன்னானோ.
|
(57) |
|
|
|
46. கடம்-குடம். அடுத்த-பொருந்திய. 47. அசிபதம்-நீயாக விருக்கிறாய் என்னும் பதம். 48. ஆகம்-உடல். 49. பரஞ்சுத்தத்து-மேலான தூய்மையில். தமப்பகுதி-தமோகுணப்பகுதி. 50. நிரஞ்சனம்-ஒளியுடைமை. 51. மாலகற்றும்-மயக்கத்தைப் போக்கும். 52. அகராதி-அகரமுதலான. தகவாம்-தகுதிவாய்ந்ததான. 53. வந்துற்று-வந்து பொருந்தி. இதயத்து ஆன்மா-உள்ளத்தில் உள்ள ஆன்மா. 54. பஞ்சீகரித்து-பஞ்சீகரணமாகி; அஃதாவது ஒன்றொன்று /304ஐவ்வைந்தாகி. 55. ஆணவம்-அகங்காரம். மாண-பெருமை பொருந்த. 56. மேலைவினை-முன்பிறப்புக்களின்வினை. 57. மனச்சுத்தமுற-மனந் தூய்மையை அடைய.
|
|
|
|