18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
கிரியைமன பாவங் கிடைப்பரிய ஞானம் மருவிவிடா தங்கம் வயங்குமெனச் சொன்னானோ.
|
(58) |
|
|
ஞாதிருவு நின்றறியு ஞானஞே யங்களுமற் றேதமற வென்று மிருந்தபடி வைப்பானோ.
|
(59) |
|
|
வானேத்த வென்று மருவற் கரியபதம் நானேத்த நல்குசிவ ஞானகுரு தேசிகனோ.
|
(60) |
|
|
மிடியற் கெளிது விழியுற்ற பொன்போல் அடியற்கு வந்திங் ககப்பட்ட வாரமுதோ.
|
(61) |
|
|
கயிலைமலை மேவுங் கடைப்பிடியாற் சீர்சால் மயிலைமலை மீதிங்கு வந்தமர்ந்த மாமணியோ.
|
(62) |
|
|
எல்லாக் கலையுணர்ந்து மெய்தாப் பொருளையொரு சொல்லாற் றிகழ்த்துதற்குத் தோன்றும் பெருமானோ.
|
(63) |
|
|
சீலந் திகழ்ந்துமதிற் சின்னமின்றி யும்படியோர் கோலஞ் சிவமெனவுட் கொள்ளுமருட் குன்றமோ.
|
(64) |
|
|
மண்களிக்க நாயேன் மனங்களிக்கக் கண்டுகொண்டு கண்களிக்க வந்த கருணைப் பெருங்கடலோ.
|
(65) |
|
|
சம்பந்த னன்றொருநாட் டானுண்ட பானாளும் எம்பந்த நீங்க வினிதமுது செய்தானோ.
|
(66) |
|
|
வேண்டுவவெல் லாமுமாம் வெண்ணீ றளிப்பதற்குத் தீண்டு மலர்க்கைச் சிவஞான தேசிகனோ.
|
(67) |
|
|
இம்மை மறுமை யிரண்டும் பெறவெமக்குச் செம்மைதர வந்த சிவஞான தேசிகனோ.
|
(68) |
|
|
அரசமய மன்றி யகங்களித்தெஞ் ஞான்றும் பரசமய மும்பணியும் பங்கயப்பொற் றாளானோ.
|
(69) |
|
|
தானபங்க னென்னுமதன் றன்னாணை யைக்கடந்து மானபங்கம் பண்ணும் வலியொன் றுடையானோ.
|
(70) |
|
|
|
58. மருவி-பொருந்தி. வயங்கும்-விளங்கும். 59. ஞாதிரு-அறிவு; காண்போன். ஏதமற-குற்றம் நீங்க. 60. வான்ஏத்த-விண்ணுலகத்தவர் போற்ற. 61. மிடியன்-வறுமையுடையவன். ஆரமுது-சிறந்த அமுதம். 62. மாமணி-சிறந்தமணி. 63. திகழ்த்துதற்கு-சுட்டிக்காட்டி உணர்த்துதற்கு. 64. சின்னம்-அறிகுறி. படியோர்-உலகத்தோர். 65. மண்களிக்க-மண்ணுலகத்திலே உள்ளவர்கள் களிப்படைய. 66. எம்பந்தம்-எமது பாசத் தொடர்பு. 67. வேண்டுவ எல்லாமும்ஆம்-வேண்டியவைகள் எல்லாவற்றையும் அடைய. 68. செம்மை-சிறப்பு. 69. பரசமயம்-சைவ சமயமல்லாத பிறசமயம். 70. மானபங்கம் பண்ணும்-பெருமைக்கிழிவுண்டாக்கும்.
|
|
|
|