18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு |
|
|
ஊனோ வுயிரோ வுயிர்க்குயிரோ வானந்தத் தேனோ வமுதோ சிவஞான தேசிகனோ.
|
(91) |
|
|
அண்ட முழுது மணுவிற் சிறியவாக் கொண்ட பெருமைக் குணக்குன் றனையானோ
|
(92) |
|
|
எங்கண் மலவிருளுக் கீண்டு மயிலைமிசைச் செங்கதிர்போற் றோன்றுஞ் சிவஞான தேசிகனோ.
|
(93) |
|
|
அற்பகலு மாறா தரனடியார்க் கீதலுறுங் கற்பகமாய் வந்துதிருக் காஞ்சிநக ருற்றானோ.
|
(94) |
|
|
பூணா மருள்வசவன் பூண்டசர பூசையன்று காணா வெமக்கின்று காட்டுசிவ ஞானியோ.
|
(95) |
|
|
விருப்புவெறுப் பின்மை விளக்கவென்புன் சொல்லைத் திருப்பதங்கொள் கின்ற சிவஞான தேசிகனோ.
|
(96) |
|
|
பொறியூடு செல்லுமனப் போர்க்களிற்றைத் தன்றாள் தறியூடு நிற்பத் தளைந்தசிவ ஞானியோ.
|
(97) |
|
|
பாடியுந்தன் சீர்த்தி பரவியுந்தன் பாதமலர் சூடியுமிக் காலந் தொலைக்கவருள் செய்தானோ.
|
(98) |
|
|
பொய்ம்மாயை யென்னும் புலியின்வாய்ப் பட்டேனைக் கைம்மாறி லாமற் கருணைகொடு மீட்டானோ.
|
(99) |
|
|
பத்தியுந்தன் பங்கயப்பொற் பாதமே பாடுகின்ற சித்தியுந்தத் தாளுஞ் சிவஞான தேசிகனோ.
|
(100) |
|
|
|
91. உயிர்க்கு உயிர்-உயிர்களை வாழச் செய்பவன். 92. அண்டம்-உலகம். 93. மலஇருள்-ஆணவமல இருள். 94. அல்-இரவு. ஈதலுறும் கொடுக்கும். 95. அன்று காணா-வசவர் பூசை செய்த அஞ்ஞான்று பார்க்காத. 96. விருப்பு வெறுப்பு இன்மை விளக்க-மெய்யறிவாளர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள் என்னுந்தன்மையை விளக்கிக்காட்ட. 97. பொறி-மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்புலன். தறி-கட்டுத்தறி. தளைந்த-கட்டிய. 98. சீர்த்தி பரவியும்-புகழைப் பாடியும். 99. பொய்ம்மாயை-உண்மையில் இல்லாத மாயை. 100. பத்தி-திருவடியில் அன்பு. சித்தி-காரியசித்தி.
|
|
|
|