முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           இருமா னொளிக்கவரு மெம்மான் - பெருமான்
           உடுத்திருந்த வாசனையா லோங்குபுலித் தோன்மேல்
           அடுத்திருந்து வாழு மரசு - தடுத்திருந்த
           தொன்றென் றவித்தை யொழித்திட் டுடம்பினைநீ
           அன்றென் றொழித்தெனைத்தா னாக்குவான் - நன்றென்று
           பொன்னை நரர்க்குக் கொடுத்துநீர் போமென்று
           தன்னை யெனக்கருளுந் தம்பிரான் - அன்னையென
           உற்றா னமுதமே யொப்பா னருண்மேனி
           பெற்றா னடியேன் பிழைபொறுப்பான் - கற்றார்
10.       தொடுத்த தொடைக்கிசைந்த தோற்றத்தான் றன்னைக்
           கொடுத்த கொடைக்குவந்த கோமான் - நடத்தலுறச்
           செல்லுமணித் தேர்மீது செய்தமைத்த பாகன்போல்
           இல்லு ளெமைவைத் தியக்குவான் - நல்ல
           சுரர்மேன்மை யெங்கீழ்மை தோன்றா தொழிய
           நரர்மேனி சாத்திவரு நம்பன் - தரைமேல்
           மழுவேறு கையான் வரினுநீ றெள்ளுங்
           கழுவே றிகளுந்தாழ் காலான் - புழுவேறும்
           மென்பயிர் போல் வெய்ய விடயத் தரிப்புண்டு
           துன்புறுவேற் குற்ற துணையானான் - என்பிலுயிர்
15.       ஆக்கினான் போல வடியே னுளத்தன்புண்
           டாக்கினான் மாறாத வானந்தந் - தேக்கினான்
           நாதாந்தன் வீடுதவு ஞானவினோ தன்றெளிந்த
           வேதாந்தன் கைம்மாறு வேண்டாதான் -போதாந்தன்
           விண்ணோ ரமுதுண்ண வேண்டி விடமுண்ட
           தண்ணா ரருள்சிறிது தானாக - எண்ணா
           இறப்புக் கடிய விருவினையோ டெங்கள்
           பிறப்புக் கடியப் பிறந்தான் - சிறப்பக்
           கயிலைமலை மீதிருந்த காட்சிபோல் வந்து
           மயிலைமலை மீதிருக்கும் வள்ளல் - பயில
20.       நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரும்
           பரனென் றறியப் படுவான் - ஒருநன்றில்
           பாவிக் குதாசனர்க்குப் பத்தர்க்குச் சீடர்க்கு
           மேவிக் கருணைபுரி மேன்மையான் - ஆவிக்குத்
           தோன்றாத் துணையாகித் தோன்றுந் துணையுமாய்ச்
           சான்றார்க் கருளுந் தகைமையான் - மூன்றால்
           பெருக்கு மிருசமயம் பேதித் தறியா
           திருக்கு நிலையி னிருப்பான் அரக்கன்
           மலையா நிலையாகி மத்தாகி யாழி
           அலையாத தாயளப்ப தன்றிச் - சிலையாய்ப்
25.       பொறுப்ப திலதாய்ப் பொறையருவி தூங்கி

6.5-10. ஒளித்து மறைத்து. தானாக்குவான்-தன்னைப்போல் செய்வான். நரர்க்கு-மனிதர்களுக்கு. 11.10-15. தொடை-மாலை. கழுவேறிகள்-சமணர்கள். 16.15-20 ஆக்கினான்-திருஞானசம்பந்தர். தேக்கினான் மிகுதிப்படச் செய்தான். தெளிந்த நன்கு தெளிவுபெற்ற. பிறப்புக்கடிய-பிறவியைச் சினந்தகற்ற. 21.20-25. ஒருநன்றுஇல்-சிறிது நன்மையும் இல்லாத. சான்றார்-சிறந்தவர். மூன்றால் பெருக்கும் இரு சமயம்-அறுவகைச் சமயம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்