| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
இருமா னொளிக்கவரு மெம்மான் - பெருமான் உடுத்திருந்த வாசனையா லோங்குபுலித் தோன்மேல் அடுத்திருந்து வாழு மரசு - தடுத்திருந்த தொன்றென் றவித்தை யொழித்திட் டுடம்பினைநீ அன்றென் றொழித்தெனைத்தா னாக்குவான் - நன்றென்று பொன்னை நரர்க்குக் கொடுத்துநீர் போமென்று தன்னை யெனக்கருளுந் தம்பிரான் - அன்னையென உற்றா னமுதமே யொப்பா னருண்மேனி பெற்றா னடியேன் பிழைபொறுப்பான் - கற்றார் 10. தொடுத்த தொடைக்கிசைந்த தோற்றத்தான் றன்னைக்
|
|
| |
| |
கொடுத்த கொடைக்குவந்த கோமான் - நடத்தலுறச் செல்லுமணித் தேர்மீது செய்தமைத்த பாகன்போல் இல்லு ளெமைவைத் தியக்குவான் - நல்ல சுரர்மேன்மை யெங்கீழ்மை தோன்றா தொழிய நரர்மேனி சாத்திவரு நம்பன் - தரைமேல் மழுவேறு கையான் வரினுநீ றெள்ளுங் கழுவே றிகளுந்தாழ் காலான் - புழுவேறும் மென்பயிர் போல் வெய்ய விடயத் தரிப்புண்டு துன்புறுவேற் குற்ற துணையானான் - என்பிலுயிர் 15. ஆக்கினான் போல வடியே னுளத்தன்புண்
|
|
| |
| |
டாக்கினான் மாறாத வானந்தந் - தேக்கினான் நாதாந்தன் வீடுதவு ஞானவினோ தன்றெளிந்த வேதாந்தன் கைம்மாறு வேண்டாதான் -போதாந்தன் விண்ணோ ரமுதுண்ண வேண்டி விடமுண்ட தண்ணா ரருள்சிறிது தானாக - எண்ணா இறப்புக் கடிய விருவினையோ டெங்கள் பிறப்புக் கடியப் பிறந்தான் - சிறப்பக் கயிலைமலை மீதிருந்த காட்சிபோல் வந்து மயிலைமலை மீதிருக்கும் வள்ளல் - பயில 20. நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரும்
|
|
| |
| |
பரனென் றறியப் படுவான் - ஒருநன்றில் பாவிக் குதாசனர்க்குப் பத்தர்க்குச் சீடர்க்கு மேவிக் கருணைபுரி மேன்மையான் - ஆவிக்குத் தோன்றாத் துணையாகித் தோன்றுந் துணையுமாய்ச் சான்றார்க் கருளுந் தகைமையான் - மூன்றால் பெருக்கு மிருசமயம் பேதித் தறியா திருக்கு நிலையி னிருப்பான் அரக்கன் மலையா நிலையாகி மத்தாகி யாழி அலையாத தாயளப்ப தன்றிச் - சிலையாய்ப் 25. பொறுப்ப திலதாய்ப் பொறையருவி தூங்கி
|
|
| |
|
| |
6.5-10. ஒளித்து மறைத்து. தானாக்குவான்-தன்னைப்போல் செய்வான். நரர்க்கு-மனிதர்களுக்கு. 11.10-15. தொடை-மாலை. கழுவேறிகள்-சமணர்கள். 16.15-20 ஆக்கினான்-திருஞானசம்பந்தர். தேக்கினான் மிகுதிப்படச் செய்தான். தெளிந்த நன்கு தெளிவுபெற்ற. பிறப்புக்கடிய-பிறவியைச் சினந்தகற்ற. 21.20-25. ஒருநன்றுஇல்-சிறிது நன்மையும் இல்லாத. சான்றார்-சிறந்தவர். மூன்றால் பெருக்கும் இரு சமயம்-அறுவகைச் சமயம்.
|
|
|
|