முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           வறப்பினு நல்கும் வளத்தாய்ச் - சிறப்ப
           அணியார் கொடையாகு மைந்தருநற் சிந்தா
           மணியார் கருணை மலையாள் - கணியா
           அறிவாங் குறிஞ்சியினின் றாங்கெழுந்து காமச்
           செறிவாங் கொடும்பாலை தீர்த்து மறியாத
           மாயையெனு முல்லை வளர்பசுக்கொண் டைவரெனும்
           ஆய ருறுதொழிலை யாங்ககற்றிப் - பாய
           விடய மெனுங்குளங்கள் வேறுவே றாகா
           துடைய வுடைத்திட் டுளமென் - றடையு
30.       மருத நிலநிறைந்து வாள்விழியா நெய்தல்
           பெரிதுபெற வந்து பெருகிக் - கருதிலொரு
           தானந்த லின்றித் தலம்விசும்பு போர்த்துவரும்
           ஆனந்த மென்னுமலி யாற்றினான் - ஞானம்
           பயனாக வோர்முப் பகுதியுயிர் வாழும்
           நயனாகு மும்மாயை நாடன் - வியனாக
           விள்ளல மன்பர் விடயக் கரவருறா
           உள்ளமெனு நன்கமைந்த வூருடையான் - தெள்ளுதமிழ்ச்
           சொல்லா மலரைச் சுவையா மதுவொழுகப்
           புல்லா வழுச்சொலெனும் புன்மையெலாம் - இல்லாமல்
35.       புன்புலவ ராங்குரங்கு போற்றாப் பெருமையுற
           இன்புலவ ராஞ்சு ரும்பார்த் தீண்டிவர - அன்பெனுமோர்
           வீடாத நார்கொண்டு மென்னா வெனுங்கரத்தால்
           வாடா வகைபுனைபா மாலையான் - பீடார்
           மலரா லயனார் மனச்சாலை நின்று
           நலநா மணிவாய்த னண்ணி - நிலகை
           வானிடையே யோடி வரையா வழகுடைத்தாய்த்
           தானனுமா னிப்பினுயர் தன்மைததாய் - ஞான
           நிறையா மரபு நிலைவழா தோங்கும்
           மறையா மரியபரி மாவான் - குறையாத
40.        தத்துவமாஞ் சேனை தனைத்துரந் திட்டாணவமாய்

26.25-30 வறப்பினும்-வறண்டாலும். வளத்தாய்-வள கையுடையதாய். ஐந்தரு-கற்பகதரு முதலியன. 31.30-35 தான் நந்தலின்றி-தான் கெடுதலில்லாமல். விடயக்கரவர்-சிற்றின்பப் பற்றுள்ள வஞ்சகர். புல்லா-பொருந்தாத. 36.35-40. வீடாத-கெடாத. மலராஅயனார்-நான்முகன். மரபுநிலை வழாது-மரபுநிலை தவறாமல். பரிமாவான்-தாங்குங் குதிரையை உடையான்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்