| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
வைத்த தளையின் வலியறுத்து - மெத்து வினையாம் பணையொடித்து வீட்டியெழுந் தோடும் மனமாம் பரிமாவை மாய்த்துத் - தனிமாரன் கன்னன் முரித்துக் கருந்தோலாற் போர்த்திருந்த துன்னுநின மென்புதசை சோரிகுடர் - என்ன அளந்தறிவ வெல்லா மழிந்துபுறந் தோன்ற விளங்கிழையார் தம்மை மிதித்துந் - துளங்கு சமயமாம் பொய்க்குழியிற் சர்ர்ந்துவிழா தோடி அமையார னந்தநீ ராடிச் - சுமையலா 45. வேதா கமமாம் விளங்குமணி தாங்கிவரும்
|
|
| |
| |
ஆதார மாஞான வானையான் - மாதேவன் சங்கர னாதிபிறை தாணுவெனும் பேருடைய சங்கரனே யாதி கருத்தாவாம் - அங்கணனை ஏத்தி யடியி னிடந்து விழிக்கமலஞ் சாத்தி முடிவணங்கிச் சக்கரமொன் - றீத்தருள்செய் என்றுபெறு மான்முதலோ ரெல்லாம் பசுவென்று மன்றமுறக் கடடுதரு மக்கொடியான் - என்றும் அடியா தெழுமொலியா யானந்த மாகி முடியாத நாத முரசான் - கடியார்மென் 50. சந்தமல ரோன்முதலோர் தங்களாற் றோற்றமுதல்
|
|
| |
| |
ஐந்தொழிலுஞ் செய்விக்கு மாணையான் - முந்து தவஞான மில்லாதார் சாற்றினும்வீ டெய்துஞ் சிவஞான தேவெனும்பேர்ச் செல்வன் - பவநாசன் முன்னொருநாட் சாதனத்துண் முந்துதிரு வெண்ணீறு மன்னு முயிரினுறு மாசொழிக்குந் - துன்னு கலவையுடன் மாசாய்க் கழியுமெனக் கூறிய புலவரினம் போற்றப் புனைந்து - பலவணிகள் தாங்குமள வன்றித் தரும்பே றிலையென்றுந் தீங்கி லிதையொருவன் றீண்டுறினும் - ஓங்கும் 55. உருத்திரனே யாவனென வோருருத்தி யாக்கம்
|
|
| |
| |
பொருத்த முறவுறுப்பிற் பூண்டு வருத்துகழை விற்றோண் மதவேளை வெல்லுமடை யாளமெனக் கற்றோய் துகின்மருங்கிற் காட்சிதரக் - கற்றோர் அறியா வறிவாகு மானைமேல் கொண்டு மறியா மனத்தை மறிப்பார் - உறியாய தற்றுநிலம் வீழ்ந்ததுபோ லாசையற மெய்ச்சிவத்தின் உற்றுவச மற்றிருக்கு முண்மையார் - முற்றும் அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கும் இழுக்கா வறமுடைய ரென்பார் - வழுக்கா 60. மனைதுறந்தார் மாயை வலிதுறந்தார் பாவ
|
|
| |
|
| |
41.40-45. தத்துவமாஞ் சேனை-தத்துவப்படைகள். தளை-கட்டு. மாரன்கன்னல்-காமனுடைய கரும்பு வில். விளங்கிழையார்-பெண்கள். 46.45-50. இடந்து-தோண்டி. விழிக்கமலம்-கண்ணாகிய தாமரை. மல் முதலோர்-திருமால் முதலியவர்கள். மன்றமுற-அவைபொருந்த. கடி-மணம். 51.50-55. சந்தமலரோன்-நான்முகன் பவநாசன்-பிறவியைக் கெடுப்பவன். மாசு ஒழிக்கும்-கற்றத்தைப் போக்கும். கலவை-கலவைச் சந்தனம். மாசாய்-குற்றமாக. 56.55-60. கழை-கரும்பு கல்-காவிக்கல். துகில்-ஆடை. வசமற்றிருக்கும்-தம் வசமில்லாமலிருக்கும்.
|
|
|
|