முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           வைத்த தளையின் வலியறுத்து - மெத்து
           வினையாம் பணையொடித்து வீட்டியெழுந் தோடும்
           மனமாம் பரிமாவை மாய்த்துத் - தனிமாரன்
           கன்னன் முரித்துக் கருந்தோலாற் போர்த்திருந்த
           துன்னுநின மென்புதசை சோரிகுடர் - என்ன
           அளந்தறிவ வெல்லா மழிந்துபுறந் தோன்ற
           விளங்கிழையார் தம்மை மிதித்துந் - துளங்கு
           சமயமாம் பொய்க்குழியிற் சர்ர்ந்துவிழா தோடி
           அமையார னந்தநீ ராடிச் - சுமையலா
45.       வேதா கமமாம் விளங்குமணி தாங்கிவரும்
           ஆதார மாஞான வானையான் - மாதேவன்
           சங்கர னாதிபிறை தாணுவெனும் பேருடைய
           சங்கரனே யாதி கருத்தாவாம் - அங்கணனை
           ஏத்தி யடியி னிடந்து விழிக்கமலஞ்
           சாத்தி முடிவணங்கிச் சக்கரமொன் - றீத்தருள்செய்
           என்றுபெறு மான்முதலோ ரெல்லாம் பசுவென்று
           மன்றமுறக் கடடுதரு மக்கொடியான் - என்றும்
           அடியா தெழுமொலியா யானந்த மாகி
           முடியாத நாத முரசான் - கடியார்மென்
50.       சந்தமல ரோன்முதலோர் தங்களாற் றோற்றமுதல்
           ஐந்தொழிலுஞ் செய்விக்கு மாணையான் - முந்து
           தவஞான மில்லாதார் சாற்றினும்வீ டெய்துஞ்
           சிவஞான தேவெனும்பேர்ச் செல்வன் - பவநாசன்
           முன்னொருநாட் சாதனத்துண் முந்துதிரு வெண்ணீறு
           மன்னு முயிரினுறு மாசொழிக்குந் - துன்னு
           கலவையுடன் மாசாய்க் கழியுமெனக் கூறிய
           புலவரினம் போற்றப் புனைந்து - பலவணிகள்
           தாங்குமள வன்றித் தரும்பே றிலையென்றுந்
           தீங்கி லிதையொருவன் றீண்டுறினும் - ஓங்கும்
55.       உருத்திரனே யாவனென வோருருத்தி யாக்கம்
           பொருத்த முறவுறுப்பிற் பூண்டு வருத்துகழை
           விற்றோண் மதவேளை வெல்லுமடை யாளமெனக்
           கற்றோய் துகின்மருங்கிற் காட்சிதரக் - கற்றோர்
           அறியா வறிவாகு மானைமேல் கொண்டு
           மறியா மனத்தை மறிப்பார் - உறியாய
           தற்றுநிலம் வீழ்ந்ததுபோ லாசையற மெய்ச்சிவத்தின்
           உற்றுவச மற்றிருக்கு முண்மையார் - முற்றும்
           அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கும்
           இழுக்கா வறமுடைய ரென்பார் - வழுக்கா
60.       மனைதுறந்தார் மாயை வலிதுறந்தார் பாவ

41.40-45. தத்துவமாஞ் சேனை-தத்துவப்படைகள். தளை-கட்டு. மாரன்கன்னல்-காமனுடைய கரும்பு வில். விளங்கிழையார்-பெண்கள். 46.45-50. இடந்து-தோண்டி. விழிக்கமலம்-கண்ணாகிய தாமரை. மல் முதலோர்-திருமால் முதலியவர்கள். மன்றமுற-அவைபொருந்த. கடி-மணம். 51.50-55. சந்தமலரோன்-நான்முகன் பவநாசன்-பிறவியைக் கெடுப்பவன். மாசு ஒழிக்கும்-கற்றத்தைப் போக்கும். கலவை-கலவைச் சந்தனம். மாசாய்-குற்றமாக. 56.55-60. கழை-கரும்பு கல்-காவிக்கல். துகில்-ஆடை. வசமற்றிருக்கும்-தம் வசமில்லாமலிருக்கும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்