முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           வினைதுறந்தார் போகம் விளைசிந் - தனைதுறந்தார்
           வேண்டுதல் வேண்டாமை யில்லாதார் மெய்யன்பு
           பூண்டு சிவனடியே பூசிப்பார் - மீண்டுபவம்
           வாராவா றோர்வார் மறையுஞ் சிவாகமமும்
           ஆராய்வா ராரா வனுபூதி சார்வாவார்
           பொன்னுஞ் சிலையும் புகழும் பழியுமே
           மன்னுங் குடிலுமணி மாளிகையும் - உன்னும்
           படிவே றிலாதார் பகைநட் பிலாதார்
           முடிவே லரசாய் முயல்வார் - கடிவேதும்
65.       இல்லா திரப்பா ரிறையை நினைந்தொன்றுஞ்
           சொல்லா திருப்பார் துதிசெய்வார் - வெல்லாத
           ஐம்புலனும் வென்றா ரவற்றைத் தடாதுமனஞ்
           செம்பொருளின் வைத்துச் செயல்செய்வார் - நம்பெருமான்
           மேனியா மஞ்செழுத்தும் வேண்டி யெடுத்துரைப்பார்
           மோனிகளாய் வீற்றிருந்து முன்னுவார் - மேனியெலாம்
           பூசுவார் வெண்ணீறு புண்டரமே சாத்துவார்
           தூசுளார் தூசு துறந்துளார் - ஆசையினால்
           வேணி முடிப்பார் விரிப்பா ருலகியலை
           நாணிநடப் பாருலகை நாணாதார் - பேணித்
70.       தனதுபத மெத்திறத்துஞ் சாரு மடியார்
           இனமருவி யெம்மருங்கு மீண்ட - மனுவுரையாத்
           தன்பெயர்கொண் டார்வமொடு சாரும் புலவரிற்கால்
           புன்புவியில் வையாப் புலவர்தாம் - வன்பவநோய்
           மாற்றுமருந் தென்று வடிவிற் படத்துடையா
           தேற்று மகிழவடி யின்றுகள்போய்ப் - போற்றுமிசை
           விண்ணிற் புகவணைய மேவுதனை மாசகன்று
           மண்ணிற் புகுமா மதியென்று - நண்ணிப்
           பலவியமும் பொங்கிப் பரவையா யார்ப்ப
           மலவலியை மாற்றுவான் வந்தான் - தொலைவில்
75.       முழங்கு மறையின் முடிந்த பொருளை

61.60-65. பவம்-பிறப்பு. ஒர்வார்-ஆராய்வார். பொன், கல், புகழ், பழி, குடில், மாளிகை எவற்றிற்கும் வேறுபாடு காணாதவர் என்க. 66.65-70. இறையை-இறைவனை வெல்லாத-வெல்லமுடியாத. தடாது-தடுக்காமல், மேனியாம்-உடலாகிய. மோனி-பேசா நிலையினர் முன்னுவார்-எண்ணுவார். 71.70-75. எத்திறத்தும்-எவ்வகையிலும். இனம்-கூட்டம். மருவி-பொருந்தி. ஈண்ட-நெருங்க. பலவியமும்-பலவகைப்பட்ட ஒலிக் கருவிகளும். பரவையாய்-கடல் முழக்கத்தைப்போல. ஆர்ப்ப-ஆரவாரிக்க மல வலி-ஆணவமலத்தின் திறல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்