| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
வினைதுறந்தார் போகம் விளைசிந் - தனைதுறந்தார் வேண்டுதல் வேண்டாமை யில்லாதார் மெய்யன்பு பூண்டு சிவனடியே பூசிப்பார் - மீண்டுபவம் வாராவா றோர்வார் மறையுஞ் சிவாகமமும் ஆராய்வா ராரா வனுபூதி சார்வாவார் பொன்னுஞ் சிலையும் புகழும் பழியுமே மன்னுங் குடிலுமணி மாளிகையும் - உன்னும் படிவே றிலாதார் பகைநட் பிலாதார் முடிவே லரசாய் முயல்வார் - கடிவேதும் 65. இல்லா திரப்பா ரிறையை நினைந்தொன்றுஞ்
|
|
| |
| |
சொல்லா திருப்பார் துதிசெய்வார் - வெல்லாத ஐம்புலனும் வென்றா ரவற்றைத் தடாதுமனஞ் செம்பொருளின் வைத்துச் செயல்செய்வார் - நம்பெருமான் மேனியா மஞ்செழுத்தும் வேண்டி யெடுத்துரைப்பார் மோனிகளாய் வீற்றிருந்து முன்னுவார் - மேனியெலாம் பூசுவார் வெண்ணீறு புண்டரமே சாத்துவார் தூசுளார் தூசு துறந்துளார் - ஆசையினால் வேணி முடிப்பார் விரிப்பா ருலகியலை நாணிநடப் பாருலகை நாணாதார் - பேணித் 70. தனதுபத மெத்திறத்துஞ் சாரு மடியார்
|
|
| |
| |
இனமருவி யெம்மருங்கு மீண்ட - மனுவுரையாத் தன்பெயர்கொண் டார்வமொடு சாரும் புலவரிற்கால் புன்புவியில் வையாப் புலவர்தாம் - வன்பவநோய் மாற்றுமருந் தென்று வடிவிற் படத்துடையா தேற்று மகிழவடி யின்றுகள்போய்ப் - போற்றுமிசை விண்ணிற் புகவணைய மேவுதனை மாசகன்று மண்ணிற் புகுமா மதியென்று - நண்ணிப் பலவியமும் பொங்கிப் பரவையா யார்ப்ப மலவலியை மாற்றுவான் வந்தான் - தொலைவில் 75. முழங்கு மறையின் முடிந்த பொருளை
|
|
| |
|
| |
61.60-65. பவம்-பிறப்பு. ஒர்வார்-ஆராய்வார். பொன், கல், புகழ், பழி, குடில், மாளிகை எவற்றிற்கும் வேறுபாடு காணாதவர் என்க. 66.65-70. இறையை-இறைவனை வெல்லாத-வெல்லமுடியாத. தடாது-தடுக்காமல், மேனியாம்-உடலாகிய. மோனி-பேசா நிலையினர் முன்னுவார்-எண்ணுவார். 71.70-75. எத்திறத்தும்-எவ்வகையிலும். இனம்-கூட்டம். மருவி-பொருந்தி. ஈண்ட-நெருங்க. பலவியமும்-பலவகைப்பட்ட ஒலிக் கருவிகளும். பரவையாய்-கடல் முழக்கத்தைப்போல. ஆர்ப்ப-ஆரவாரிக்க மல வலி-ஆணவமலத்தின் திறல்.
|
|
|
|