முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           வழங்கு மருளுடையான் வந்தான் - விழுந்து
           பரவு மடியார் பவப்பிணிக்குத் தானே
           மருவு மருந்தனையான் வந்தான் - பொருவில்
           மணிகண்ட னென்னுமொழி மாற்றியே யக்க
           மணிகண்ட னென்னுமவன் வந்தான் - கணிகண்
           டெயினர் மணமயர்வுற் றின்ப மருவும்
           மயிலை மலையுடையான் வந்தான் - துயர்செய்
           பொறிக்குஞ் சரமதனைப் போகாமற் றாளின்
           மறிக்குஞ் சிவஞானி வந்தான் - எறிக்கும்
80.       தினகரனா லாரழலாற் றிங்களாற் போகா
           மனவிருளை நீக்குவான் வந்தான் - எனமுன்
           பரிச்சின்ன ஞானம் பரியநார் காதில்
           திருச்சின்ன வாரமுதந் தேக்க - விரித்துக்
           கவிராயர் போற்றக் கவரிபல முத்திப்
           புவிராய ரென்றி ட்டிப் போதத் - தவிராமல்
           ஞாலவட்டந் தாங்குமொரு நாகத்தின் குட்டியென
           ஆலவட்டம் பாங்கு ரசைந்துவரச் - சாலவட்ட
           மாமதியாய் நன்கு வளர்ந்து துறந்தபிறை
           காமருதன் வாழிடத்தைக் காண்பதற்குச் - சேர்முறைபோல்
85.       வெள்ளை மணிக்கவிகை மேனிழற்ற வான்மழைபோல்
           கொள்ளைமல ரன்பர் குழாம்பொழியக் - கிள்ளை
           மொழியார் மயறூந்து முத்திபதத் தென்றும்
           அழியாத வின்ப மருள்வாய் - பழியா
           நடையா யுலகிறந்த ஞானோ தயாவெம்
           உடையாய் புலன்கொ லுணர்வாம் - படையாய்
           அணியே யமுதமே யாவியே சிந்தா
           மணியே கருணை மலையே - பணியேறு
           கோலங் கரந்துவந்த கோதிலாத் தேறலே
           ஞாலம் புகுஞான ஞாயிறே - சீலங்கொள்
90.       காவேயென் செல்வமே கண்ணே சிவஞானத்

76.75-80. பொருவுஇல்-ஒப்புல்லாத. மணிகண்டன்-நீலமணி போன்ற கரிய கழுத்தையுடையவன். அக்க மணிகண்டன்-சிவ கண்மணியைக் கழுத்தில் அணிந்தவன். எயினர்-வேடர். மணமயர்வுற்று-மணஞ்செய்து. பொறிக்குஞ்சரம்-புலன்களாகிய யானைகள். மறிக்கும்-தடுக்கும். எறிக்கும்-கதிரைவீசூம். 81.80-85. தினகரன்-கதிரவன் ஆரழல்-மிகுந்த தீ மனவிருள்-அஞ்ஞானம். திருச்சின்னம்-அடையள ஒலிக் கருவிகள். முத்தி-வீடுபேறு. புவிராயர்-உலக அரசர்கள். ஞாலவட்டம்-உலகவட்டம். வட்டமாமதி-வட்ட வடிவம் பொருந்திய முழுத் திங்கள்.86.85-90. கவிகை-குடை. கொள்ளைமலர்-மிகுதியான மலர். மபன் துரந்து-காம மயக்கத்தைப் போக்கி. பழியா-பழிக்கப்படாத. பணியேறு-பாம்புகளணியப்பெற்ற கோலம்-வடிவம். கரந்துவந்த-மறைத்து வந்த. தேறல்-தேன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்