| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
கிசையலா மோவரசே யென்பார் - நசையினால் யாம்புணர்ந் தின்ப மிவராற் பெறுவதலால் தாம்புணர்ந் தின்புறார் தாமென்பார் - நாம்புணர்ந்தால் நீங்குவது முண்டா நினையா திருந்தபடி ஆங்குறுவ தேநல் லறிவென்பார் - நாங்கள் கரவி லிவர்வடிவங் கண்டநாள் தொட்டிங் கிரவு பகலில்லை யென்பார் - அரிதில் பிறந்தபயன் மன்மதனாற் பேதுற்று வாளா இறந்து படுவதோ வென்பார் - சிறந்த 110. சிலையோநின் னுள்ளஞ் சிவஞான தேவே
|
|
| |
| |
இலையோ கருணைதா னென்பார் - மலையோடு மற்பொருதல் போல வலிந்துவரு கென்பார்நீ எற்புணர்வ தென்னென் றிரங்குவார் - பொற்ப அறவனே நின்னை யலதெண்ணோம் வானத் திறைவனே வந்தாலு மென்பார் - துறவனே மேவிலைமை நின்னை விகாரி யெனவுரைப்பார் யாவருல கெங்கு மிலையென்பார் - பூவில் இவரெலும்புந் தோலுமா யெய்தினா ராயின் எவர்விரும்பி வேண்டுவா ரென்பார் - அவர் நெருங்கி 115. எய்த வுடன்வணங்கி யிவ்வா றடியேனுஞ்
|
|
| |
| |
செய்த தவங்கள் செலுத்தப்போய் ஐயன் தொழும்பு மறந்தொழியாத் தொல்விசயன் வில்லின் தழும்பு மறைந்த தலையும் - எழுந்துமதன் வின்னியா சஞ்செய்முன் வென்றுபகை யின்மையால் சன்னியா சஞ்செய்படைத் தண்ணுதலும் - மன்னிவாழ் கேவலமென் கங்குல் கெடுக்குந் தொழிலொன்றில் மேவலுற வொத்த விழியிரண்டும் - ஆவலொடு நல்லவியல் கேளா நணுகுமிசை பாடுநரைச் செல்ல விடுத்த திருச்செவியும் - வல்ல 120. இயற்பகையை முன்ன மிரந்த மொழியை
|
|
| |
|
| |
106.05-110. நசை-விருப்பம். பேதுற்று-மயக்கத்தையடைந்து. சிலை-கல். 111.110-115. மற்பொருதல்-மற்போர் செய்தல். அறவன்-அறவடிவானவன். துறவன்-துறவையுடையவன். 116.115-120. தொழும்பு-தொண்டு. தொல்விசயன்-பழமையான அருச்சுனன். வில்நியாசம்-வில்லைத்தொடுத்தல்.
|
|
|
|