முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           கிசையலா மோவரசே யென்பார் - நசையினால்
           யாம்புணர்ந் தின்ப மிவராற் பெறுவதலால்
           தாம்புணர்ந் தின்புறார் தாமென்பார் - நாம்புணர்ந்தால்
           நீங்குவது முண்டா நினையா திருந்தபடி
           ஆங்குறுவ தேநல் லறிவென்பார் - நாங்கள்
           கரவி லிவர்வடிவங் கண்டநாள் தொட்டிங்
           கிரவு பகலில்லை யென்பார் - அரிதில்
           பிறந்தபயன் மன்மதனாற் பேதுற்று வாளா
           இறந்து படுவதோ வென்பார் - சிறந்த
110.       சிலையோநின் னுள்ளஞ் சிவஞான தேவே
           இலையோ கருணைதா னென்பார் - மலையோடு
           மற்பொருதல் போல வலிந்துவரு கென்பார்நீ
           எற்புணர்வ தென்னென் றிரங்குவார் - பொற்ப
           அறவனே நின்னை யலதெண்ணோம் வானத்
           திறைவனே வந்தாலு மென்பார் - துறவனே
           மேவிலைமை நின்னை விகாரி யெனவுரைப்பார்
           யாவருல கெங்கு மிலையென்பார் - பூவில்
           இவரெலும்புந் தோலுமா யெய்தினா ராயின்
           எவர்விரும்பி வேண்டுவா ரென்பார் - அவர் நெருங்கி
115.       எய்த வுடன்வணங்கி யிவ்வா றடியேனுஞ்
           செய்த தவங்கள் செலுத்தப்போய் ஐயன்
           தொழும்பு மறந்தொழியாத் தொல்விசயன் வில்லின்
           தழும்பு மறைந்த தலையும் - எழுந்துமதன்
           வின்னியா சஞ்செய்முன் வென்றுபகை யின்மையால்
           சன்னியா சஞ்செய்படைத் தண்ணுதலும் - மன்னிவாழ்
           கேவலமென் கங்குல் கெடுக்குந் தொழிலொன்றில்
           மேவலுற வொத்த விழியிரண்டும் - ஆவலொடு
           நல்லவியல் கேளா நணுகுமிசை பாடுநரைச்
           செல்ல விடுத்த திருச்செவியும் - வல்ல
120.       இயற்பகையை முன்ன மிரந்த மொழியை

106.05-110. நசை-விருப்பம். பேதுற்று-மயக்கத்தையடைந்து. சிலை-கல். 111.110-115. மற்பொருதல்-மற்போர் செய்தல். அறவன்-அறவடிவானவன். துறவன்-துறவையுடையவன். 116.115-120. தொழும்பு-தொண்டு. தொல்விசயன்-பழமையான அருச்சுனன். வில்நியாசம்-வில்லைத்தொடுத்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்