| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
அயர்த்த மலர்வா யழகும் - வியப்புறவவ் வாலமுண்ட தென்ப தறையாம லிவ்வுலகம் பாலருந்து மென்னப் படுமிடறும் - மேலுவந்து நாமங்கை போற்றவுள நாணுந் தலைமாலை போமங் கலமாம் புயமலையுஞ் - சேமங்கொள் ஏனமருப் பில்லா திருப்பதுவு மோரழகென் றூன மறத்திகழு மொண்மார்பும் - வானம் வழுத்தம் புயமா மனையான் றலைக்குக் கழுத்தென்ப தில்லாக் கரமும் - எழுத்தென்று 125. கொள்ளுங் கொடுவரித்தோல் கொள்ளாது நூல்வலியைக்
|
|
| |
| |
கொள்ளுந் துகிலுடுத்துக் கொண்மருங்கும் - உள்ளுமும்பர் மன்னு முடிவெருவி வந்துழியிம் மன்பதைதஞ் சென்னி படச்சிவக்குஞ் சித்தடியும் - என்னுடைய கண்களிப்பக் கண்டுமிகக் காதலா னேனிந்த மண்களிக்க வந்தசுவை வானமுதம் - பெண்களுக்கு மாலா ரணனமரர் மாதவரிம் மானுடர்போல் தோலாத வீர முடைத் தோற்றத்தான் - மேலாய செங்கையமு தன்னான் சிவஞான தேசிகனெம் பங்கமல மாயைப் பகையானான் - தங்கணல 130. ஊண்துறந்து சீர்சா லுடைதுறந்து செம்மணிப்பொன்
|
|
| |
| |
பூண்துறந்து கண்கள் புனல்சொரிய - ஆண்டடைந்து நையு மவாநிற்க நாயேன்பாற் பொங்குமருள் செய்து திருக்டைக்கண் சேர்த்தினான் - ஐயனைநான் அன்று தொடங்கி யணைவான் விருப்புற்றேன் என்றுணைநீ யன்றி யிலைநெஞ்சே - நன்றிபுரி வேதா கமங்கள் விதிக்கும் விதியனைத்தும் நீதான் புனிதமுற நேர்ந்தன்றோ - ஆதார யோக மிருநான்கு முன்னைவய மாக்குவதற் காக முயலுவன வல்லவோ - போகமுறு 135. தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றறியும்
|
|
| |
|
| |
121.120-125. ஏன மருப்பு-பன்றிக் கொம்பு. வழுத்து-போற்றுகிற. 126.125-130. கொடுவரித்தோல்-புலித்தோல். மருங்கு-பக்கம். மால்-திருமால். ஆசணன்-நான்முகன். அமரர்-தேவர். பங்கம்-பழுதுடைய. 131.130-135. புனல்-நீர். பூண்-அணிகலம்.
|
|
|
|