| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
நன்மைக்கும் கொள்ளுமொரு நட்பிற்கும் - வன்மைக்கும் ஈகைக்குந் தன்னை யிருந்தாங் குணர்ந்தடையும் ஓசைக்கும் நீயே யுறுதுணைகாண் - போகத்தின் நின்றாரை மெய்த்துறவி னிற்பிப்பா யத்துறவில் சென்றாரை யில்லிற் செறிப்பிப்பாய் - குன்றா அறத்தை மறமாக்க வம்புவியின் மிக்க மறத்தை யறமாக்க வல்லாய் - நிறுத்தி ஒடுக்குதலே முத்தி யுனைவிடயத் தோட விடுக்குதலே பந்தமென மிக்காய் - அடக்குதலால் 140. நின்றாயே யாகிலொரு நீதான் புலன்பரந்து
|
|
| |
| |
சென்றாலு மெய்துவதோர் தீதுண்டோ - பொன்றாத முத்தி யொருகணத்தின் முன்வர நீ வேண்டுவையேல் இத்தனையும் நின்னா லிசைந்தனகாண் -சத்தியமாய் ஏதேனு மேனி யெனக்கொண்டு வந்தருள மாதே வனைநீ வருவிப்பாய் - தூதேவும் நம்பிகர வுண்டவொரு நற்பனவப் பிள்ளைதனை அம்புவியின் மீள வழைத்ததூஉம் எம்பெரிய நாவிற் கரசு நடுக்கடலுட் கற்பெருந்தூண் மேவிப் புணையா மிதந்ததூஉம் - பாவிற்கு 145. வல்ல வொருபுலவர் வல்லென்பு பெண்ணாகச்
|
|
| |
| |
செல்ல மயிலையிடைச் செய்ததூஉம் - தில்லையினில் வாளா நெடுங்கண் மடவரலை நீலகண்டர் சூளால் மனையுட் டுறந்ததூஉம் - தோளாத முத்தனைய நன்மாதை முன்ன மியற்பகையார் வித்தகனை நல்கி விடுத்ததூஉம் - புத்திரனைத் தொண்ட ரறுத்தமலன் றொண்டர்போல் வந்திரப்பப் பண்டு சமைத்துப் படைத்ததூஉம் மண்டிருளில் முக்கணனார் செல்ல முளைவார மாறனார் அக்கணமே செய்க்க ணடைந்ததூஉம் - புக்கரனார் 150. வேண்ட வரிந்துமகள் மென்கூந்தல் கஞ்சாறர்
|
|
| |
| |
ஆண்டு வணங்கி யளித்ததூஉம் - மூண்டமரின் ஏற்றானை யீசனென வேனாதி நாதனார் நீற்றா னினைந்துருகி நின்றதூஉம் - மாற்றானைக் குத்தினா னென்று குறியாமல் மெய்ப்பொருளார் தத்தனே காக்கவெனச் சாற்றியதூஉம் - மத்தவிபஞ் சிந்த மலரைச் சிவகாமி யாண்டார்க்காய் முந்தியெறி பத்தர் முனித்ததூஉம் - சுந்தரரைத் தொண்டத் தொகைபெறூஉத் தொல்லுலக முய்யவிறன் மிண்டத் தொழும்பர் வெகுண்டதூஉம் - மண்டபத்து 155. நீலநக்கர் பாணருக்கு நேசித்து நல்யாக
|
|
| |
|
| |
136.135-140. ஓகை - மகிழ்ச்சி போகத்தில்-உலக வாழ்வில். மிக்காய்-மிகுதியாக. 141.140-145. புலன்களிற் பரவி. பொன்றாத-கெடாத இசைந்தன-பொருந்துவன நம்பி-சுந்தரர். கர-முதலை. பனவப்பிள்ளை-பார்ப்பனச் சிறுவன். அம்புவி-உலகம். 146.145-150. வல்லவொரு புலவர்-திருஞான சம்பந்தர். மயிலை-மயிலாப்பூர். வாளாம்-வாளைப்போன்ற. மடவரல்-இளம் பெண். மனையுள் துறந்ததும்-இல்லத்துக்குள் இருந்து கொண்டே துறந்தொழுகியதும். தோளாத-துளைக்கப் பெறாத. வித்தகனை-வித்தகனாகிய சிவபெருமானுக்கு. அமலன்-சிவபிரான். மாறனார்-இணையான்குடிமாற நாயனார் செய்க்கண்-வயலிடத்து. புக்கு-புகுந்து. 151.150-155. கஞ்சாறர்-மானக்கஞ்சாறர். மாற்றான்-பகைவன். மத்த இயம்-மத்தகத்தை யுடைய யானை. தொழும்பர்-அடியார்.
|
|
|
|