முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           சாலை யிடத்தைமுனந் தந்ததூஉம் - மாலயற்கும்
           எட்டாற்கு வேண்டி யிருங்கலயர் குங்குலியம்
           முட்டாமற் கொள்ள முயன்றதூஉம் - வட்டாடி
           ஆக்கு பொருளை யரனடியார்க் கன்பினால்
           மூர்க்க ருதவி முடித்ததூஉந் - தூக்குதலை
           மீது பரனொளித்த வெண்கோ வணத்திற்காப்
           போதவமர் நீதியார் புக்கதூஉம் - ஆதியுமை
           பாக னடியவரைப் பண்டைநிலை யுன்னியதம்
           தோகைகரங் கம்பர் துணித்ததூஉம் - சோகமறக்
160.       கண்ணப்பர் மென்றசையைக் காளத்தி யார்தம்மை
           உண்ணப்ப வென்றுமுன மூட்டியதூஉம் - வண்ணப்பொன்
           மீனை யளக்கரிடை மிக்க வதிபத்தர்
           மேனைமரு கற்கென்று விட்டதூஉம் - யானைமிசை
           வந்தமலை நாட்டரசர் வண்ணானைத் தொண்டரெனப்
           பந்தமறு மன்பாற் பணிந்ததூஉம் - கந்தைபரற்
           கன்பி னுதவிலனென் றக்குறிப்புத் தொண்டர்தாம்
           முன்புசிலை யோடுதலை மோதியதூஉம் - அன்புறுமோர்
           தாட்புலியார் போற்றுதிருத் தாண்டவனெற் கொள்கிளையைக்
           கோட்புலியார் நேசமறக் கொன்றதூஉம்-கேட்பிலிவை
165.       எல்லாமு நின்ற னிசைவாற் புரிந்தனநீ
           அல்லா தியற்றலற மன்றுகாண் - சொல்லாட
           நின்பெருமை யாரறிவார் நீயென் னொடுகூடில்
           என்பெருமை சொல்வாரு மில்லைகாண் - வன்புவியில்
           நின்னைத் துணையல்லை நீயென்று நீங்கினால்
           பிள்ளைத் துணையாகும் பேரில்லை - உன்னைத்
           துணையாக் கொளற்குத் துணைநீ நினக்கிங்
           கிணையாய்ப் பிறிதொன் றிலைகாண் - புணையாய்ப்
           பிறப்புக் கடற்குப் பிடிக்கப் படுவாய்
           மறப்புற் றதினழுத்த வல்லாய் - சிறப்பு
170.       விலங்கி னரர்தமக்கு மேவியது நின்னால்

156.165-160. பாணர்-யாழ்ப்பாணர். முட்டாமல்-தட்டுப்படாமல். வட்டாடி-சூதாடி. தூக்குதுலை-தொங்கவிடப்பட்ட நிறைகோல். பண்டைநிலை-பழைய இல்லற நிலை. கம்பர்-கலிக்கம்ப நாயனார். தோகை-மயிலைப் போன்ற மனைவி. 161.160-165. அளக்கர்-கடல். மேனைமருகன்-இமாசல மன்னன் மனைவியாகிய மேனைக்கு மருமகன். மலைநாட்டரசர்-சேரமான் பெருமாள். கந்தை-கிழிந்த ஆடை. பரற்கு-சிவபிரானுக்கு. ஓர்-ஒப்பற்ற. தாட்புலியார்-புலிக்கால் முனிவர். தாண்டவன்-கூத்தப்பிரான். கிளை-சுற்றம். 166.165-170. இசைவு-உடன் பாடு. புணை-தெப்பம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்