| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
இலங்கு முனிவரர்கட் கெல்லாம் - நலங்கொள் பெருமை நினைத்துணைக்கொள் பெற்றியா லன்றோ உரிமைநீ யன்றிவே றுண்டோ - அருமையென்ப தில்லையுனக் கெவ்விடத்து மென்மனமே யாதலினால் நல்ல பெரியசிவ ஞானிபால் - செல்லவுனை வேண்டுவேன் தூதாக வேதக் கிளியைவிடில் காண்ட லரிததனாற் கண்டாலு - மாண்டதுதான் ஒன்றாக வோதா துரைக்கும் பலமயங்கச் சென்றாலு நீயேதான் செல்லாமல் - நின்றாலும் 175. நீயே பிறிதில்லை நெஞ்சமே யெற்பயந்த
|
|
| |
| |
தாயே யவனிடங்கள் சாற்றக்கேள் - பேயேன் எழுநகரி னுட்சிறந்த தென்பதலாற் சீர்மை முழுது மியம்ப முடியா - தழகுறுவேல் கந்தனுயர் கச்சிவளங் காற்கூ றளவுரைப்பன் ஐந்துகரன் சொல்வ னரைக்கூறு - நந்தமரன் கூறுடையா ளோர்முக்காற் கூறுரைப்பள் முற்றுமிள ஏறுடையான் சொல்வ னெனவனந்தன் - வீறுடைய நாவா யிரங்கொண்டு நானுரைத்தல் காற்கீழென் றோவாத நாணாகி யோடியே - தாவாத 180. வேலையிடை வீழவவன் மேல்வீழ்ந்து துஞ்சினான்
|
|
| |
| |
போல வரிகிடப்பப் பொங்குபுகழ் - ஞாலமெலாம் நண்ணவொரு காசி நடுமெய்ஞ் ஞகரமுறும் எண்ண வரிய வெழினகரும் - மண்ணுலகில் முன்னோர் தொடைப்பொருளை முற்றுங் கரந்துரைத்துப் பின்னோ ரெமதென்னும் பெற்றிபோல் - அன்னோபின் வந்திளைய காசி மரிப்பார்க்கு முத்திபதந் தந்திடுவ னென்றுமிகு தன்செயலை - முந்துகொடு சென்றுபர தேயத்திற் சேர்ந்திருப்பச் சீர்மலிந்து மன்றன் மலரு மணியணியுந் - துன்றுநறும் 185. குங்குமமுஞ் சந்தனமுங் கோலம் பெறப்புனையா
|
|
| |
|
| |
171.170-175. பெற்றி-பெருமை. 176.175-180. பயந்த-பெற்ற. அரன்கூறுடையாள்-உமாதேவி. அனந்தன்-ஆதிசேடன். வீறு-பெருமை ஓவாத-ஒழியாத. வேலை-கடல். துஞ்சினான்-செத்தான். 181.180-185. அரி-திருமால். முன்னோர் தொடைப் பொருள்-சான்றோர்களுடைய பாட்டின் பொருள். கரந்துரைத்து-ஒளித்துக்கூறி மரிப்பார்-இறப்பவர். மன்றல் மலர்-மணந்தங்கிய மலர்.
|
|
|
|