முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           அங்குருகு மேகலையு மாங்கொலிப்பத் - துங்கமுறு
           நன்பதியைச் சேரவரு நங்கைபோற் சென்றுமலி
           தன்பதியைச் சார்ந்தணைந்த தண்கங்கை - என்பதுதான்
           புத்தா றெனத்தான் புராதனவா றென்னுமணி
           முத்தா றுடுத்த முதுகிரியுஞ் - செய்கதாமம்
           அன்னமாய் முற்றும் விளைய வளங்களெலாம்
           துன்னுநாட் டிற்குச் சுவைவிளைய - மன்னுவேள்
           மீதண்ட ரோடமர்ப்ப வெங்கணையும் வின்னாணும்
           கோதண்ட மும்பொருந்திக் கொண்டே - வேதண்டம்
190.       ஒப்ப வுயர்த்தவுய ருப்புக் குவான்மீது
           வெப்ப மறுமதிய மெய்யுரிஞ்சத் - துப்புறுபுள்
           உண்ணிலா வுண்ணா தொழிந்துமட வார்முறுவல்
           வெண்ணிலா வுண்டு மிகவளரக் -கண்ணெலாம்
           பூப்பட் டிருந்தாலும் பூம்பொய்கை நன்காய்ந்து
           பாப்பட்ட சேடன் பணங்காட்ட - வாய்ப்புற்ற
           கங்கையுடன் வந்தாரூர் கண்டுவரு வீரென்று
           தங்குறுதன் மக்க டமைவிடுப்பத் - துங்கமுறும்
           முத்தீ வளர்ப்பமறை முன்னோர் விருந்தினுக
           ரத்தீ யவிப்ப வவர்மாதர் - கொத்தின்
195.       கொடியனையார் கொம்மைமுலைக் குன்றே வருத்தத்
           துடியிடையே நின்று துவள - நெடிய
           கலவ மயிலிவருங் கந்தவேள் தேரே
           உலவ நிலைபெயர்வுற் றோடப் - புலவர்
           இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
           மரப்பாவை சென்றுவந் தற்றென் - றுரைப்ாவில்
           வைதலை யஞ்சி வளத்தா ரிரப்பவர்தாம்
           எய்தலை நோக்கி யிருந்தவப் - பொய்தவிர
           இல்லென் பதுமொருவ ரீயென் பதும்வினையாம்
           சொல்லென்ப தின்றுபெயர்ச் சொல்லாக - நல்லவளம்
200.       மிக்கெலா நாளும் விழவறா வீதியணி

186.185-190. கோலம்பெற-அழகுண்டாக. புனையா - அணிந்து. குருகு-வளையல். நன்பதி-நல்ல கணவன். புத்தாறு-புதிய ஆறு. புராதனம்-பழமை. முதுகிரி-பழமலை. துன்னும்-பொருந்தும். அமர்ப்ப-போர் செய்ய. கோதண்டம்-வில். வேதண்டம்-மலை. குவால்-குவியல். 191.190-195. துப்புறுபுள்-சகோரப்பறவை. பணம்-படம். உகரத்தீ-வயிற்றுப்பசி. 196.195-200. கொம்மை-பருத்த. துடியிடை-உடுக்கையைப்போன்ற இடை துவள-அசைய. இரப்பாரை யென்பது முதல் அற்று என்பது வரை திருக்குறள். வளத்தார்-செல்வத்தையுடையவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்