| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
அங்குருகு மேகலையு மாங்கொலிப்பத் - துங்கமுறு நன்பதியைச் சேரவரு நங்கைபோற் சென்றுமலி தன்பதியைச் சார்ந்தணைந்த தண்கங்கை - என்பதுதான் புத்தா றெனத்தான் புராதனவா றென்னுமணி முத்தா றுடுத்த முதுகிரியுஞ் - செய்கதாமம் அன்னமாய் முற்றும் விளைய வளங்களெலாம் துன்னுநாட் டிற்குச் சுவைவிளைய - மன்னுவேள் மீதண்ட ரோடமர்ப்ப வெங்கணையும் வின்னாணும் கோதண்ட மும்பொருந்திக் கொண்டே - வேதண்டம் 190. ஒப்ப வுயர்த்தவுய ருப்புக் குவான்மீது
|
|
| |
| |
வெப்ப மறுமதிய மெய்யுரிஞ்சத் - துப்புறுபுள் உண்ணிலா வுண்ணா தொழிந்துமட வார்முறுவல் வெண்ணிலா வுண்டு மிகவளரக் -கண்ணெலாம் பூப்பட் டிருந்தாலும் பூம்பொய்கை நன்காய்ந்து பாப்பட்ட சேடன் பணங்காட்ட - வாய்ப்புற்ற கங்கையுடன் வந்தாரூர் கண்டுவரு வீரென்று தங்குறுதன் மக்க டமைவிடுப்பத் - துங்கமுறும் முத்தீ வளர்ப்பமறை முன்னோர் விருந்தினுக ரத்தீ யவிப்ப வவர்மாதர் - கொத்தின் 195. கொடியனையார் கொம்மைமுலைக் குன்றே வருத்தத்
|
|
| |
| |
துடியிடையே நின்று துவள - நெடிய கலவ மயிலிவருங் கந்தவேள் தேரே உலவ நிலைபெயர்வுற் றோடப் - புலவர் இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்றென் - றுரைப்ாவில் வைதலை யஞ்சி வளத்தா ரிரப்பவர்தாம் எய்தலை நோக்கி யிருந்தவப் - பொய்தவிர இல்லென் பதுமொருவ ரீயென் பதும்வினையாம் சொல்லென்ப தின்றுபெயர்ச் சொல்லாக - நல்லவளம் 200. மிக்கெலா நாளும் விழவறா வீதியணி
|
|
| |
|
| |
186.185-190. கோலம்பெற-அழகுண்டாக. புனையா - அணிந்து. குருகு-வளையல். நன்பதி-நல்ல கணவன். புத்தாறு-புதிய ஆறு. புராதனம்-பழமை. முதுகிரி-பழமலை. துன்னும்-பொருந்தும். அமர்ப்ப-போர் செய்ய. கோதண்டம்-வில். வேதண்டம்-மலை. குவால்-குவியல். 191.190-195. துப்புறுபுள்-சகோரப்பறவை. பணம்-படம். உகரத்தீ-வயிற்றுப்பசி. 196.195-200. கொம்மை-பருத்த. துடியிடை-உடுக்கையைப்போன்ற இடை துவள-அசைய. இரப்பாரை யென்பது முதல் அற்று என்பது வரை திருக்குறள். வளத்தார்-செல்வத்தையுடையவர்.
|
|
|
|