முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           திக்கெலா மேத்தமலி சேயூரும் - முக்கணனார்
           மந்திர மொன்றா யிரமாய் வளர்ந்துபயன்
           தந்திடு மொண்மயிலைத் தண்மலையும் - பந்தமறு
           தன்னை மருவினரைத் தானாக்குந் தன்மையுடை
           மன்னுசிவ ஞானி மருவிவாழ் - நன்னிலையால்
           அம்ம பிரமபுர மாகும் பொருள்படவே
           பொம்மபுர மென்னும் புகழ்ப்பதியும் - எம்மிறைவன்
           வீற்றிருந்து வாழிடங்கண் மேவியிவற் றொன்றினுறும்
           தேற்ற முணர்ந்துநீ செல்லுங்கால் - ஆற்றலுடன்
205.       இல்லை யிறைவனாற் பூதமலா லிங்கென்று
           சொல்லி யுனைமறித்துச் சூழ்ந்துதான் - நல்ல
           அலகா யுதமெறித லாயுரைப்ப னந்த
           உலகா யதனுரைகேட் டோடேல் - பலகாலும்
           நாணேது மின்றிக் கருமமலா னானிறையைக்
           காணே னெனுங்கரும காண்டியொடு - பூணேல்
           நினையணு வாக்கு நியாய னுரையைத்
           தினையள வாயினுநீ தேறேல் - பினைவருவை
           சேடியனை நெஞ்சமே சேரவவன் றம்பியென
           நாடி யொருசிறிதும் நண்ணுறேல் கூடியொரு
210.        புத்திகண பங்கமெனப் புத்திகெட்ட புத்தனுரை
           மெய்த்ததென நின்று விடாதிநீ - முத்திபெறு
           தன்னை யணுவாக்கித் தாழ்பஞ்ச ராத்திரிதான்
           என்ன சொலினு மிசைந்துறேல் - நின்னைக்
           கெடுப்பதே யெண்ணிக் கெடும்யோ கிகளை
           விடுப்பதே நன்றென்று மேவேல் - அடுப்பதெனாக்
           கள்ளைக் குடித்துக் களிக்கின்ற வாமிமொழி
           கொள்ளத் தகுவதெனக் கொண்டுறேல் - மெள்ளப்
           பகுதி விகுதி பகுத்தறியின் முத்தி
           தகுதியெனுஞ் சாங்கியனைச் சாரேல் - மிகுதிபெறும்
215.        நஞ்சமார் கண்டனொடு நாரணனை யொப்பாக்கும்

201.200-205. எலாநாளும்-எல்லா நாளும். சேயூரும்-காளையை நடத்தும். தானாக்குதல் - பொய்யறிவை யொழித்து மெய்யறிவைக் கொடுத்தல். 206.205-210. முதலிய அடிகளால் சமயவாதிகள் செய்தி உரைக்கப்படுகிறது. 211.210-215. மெய்த்தது-உண்மையானது. இசைந்துறேல்-ஒத்துக்கொள்ளாதே.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்