| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
பஞ்சமா பாதகரைப் பாராமல் - அஞ்சிநீ சென்று திருமடத்தைச் சேர்ந்துகழு நீர்த்தடமாய் நின்று நறியகழு நீர்பூப்பத் - துன்று முகிலா யடைந்துபுகை மூன்றுலகுங் காக்க நிகமா கமம்விதித்த நீதி - இகலாத கோடிமறை யோர்நிறையக் கொள்ளுமுண வின்பயனை நாடியிடும் பிச்சையா னல்குமொரு - கோடிசிவ யோகிகட்குப் போன முவந்து சமைப்பாரைப் போகிகட்குப் புற்றனைய பொற்சடைமேல் - மோகிகட்குப் 220. பூசனைக்கு வேண்டும் பொருளுதவு கின்றாரை
|
|
| |
| |
வாசமலர் கொய்து வருவாரைப் - பூசனைசெய் கின்றாரை ஞானநூல் கேட்பாரை கைந்தோதா நின்றாரை மேனியெலாம் நீறணிந்து - குன்றாத கண்டி புனைந்து கமலா தனத்திருந்து கொண்டு சிவனைக் குறிப்பாரைக் - கண்டுருகிப் போற்றிவணங் காவுட் புகுந்து புரமெரித்த சீற்ற மறந்ததெய்வ சிங்கத்தை - மாற்றலரும் சீமானை யென்றுந் தெவிட்டாத தெள்ளமுதைக் கோமானை ஞானக் குணக்குன்றைப்- பூமாரன் 225. வண்டு படாத மலரைநாஞ் செய்தவத்தால்
|
|
| |
| |
கண்டுகொளுந் தண்ணறும்பூங் கற்பகத்தை - மண்டலமும் ஏனைப் புவனங்க ளெல்லாமும் வேண்டுபசுந் தேனைச் சிவஞான தேசிகனை - நீநெக் குருகியெதிர் கண்டுகொண்டே யோடிப் பெருமான் திருவடியில் வீழ்ந்தன்பு தேங்கிப் - பருகமுதே வேண்டுவார் வேண்டுவன வேண்டியவா றேயுதவும் ஆண்டகையே யெங்க ளரசனே - நீண்டவொரு தந்திதரு பச்சைபுனை தன்மையா னீண்டுபச்சைக் கந்த மரபிலுறுங் காரணனே - பந்தமற 230. ஆளாய வன்பர்க் கமரா பதம்போல
|
|
| |
|
| |
216.215-220. துன்று-பொருந்து. இகலாத-மாறுபடாத. போனம்-உணவு.221.220-225. கண்டி-சிவகண்மணிமாலை. கமலாதனம்-பதுமாசனம். பூமாரன்-காமன். 226.225-230. நெக்குருகி-நெகிழ்ந்துருகி. பச்சைக்கந்த மரபு-பச்சைக்கந்த தேசிகா மரபு.
|
|
|
|