முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           பஞ்சமா பாதகரைப் பாராமல் - அஞ்சிநீ
           சென்று திருமடத்தைச் சேர்ந்துகழு நீர்த்தடமாய்
           நின்று நறியகழு நீர்பூப்பத் - துன்று
           முகிலா யடைந்துபுகை மூன்றுலகுங் காக்க
           நிகமா கமம்விதித்த நீதி - இகலாத
           கோடிமறை யோர்நிறையக் கொள்ளுமுண வின்பயனை
           நாடியிடும் பிச்சையா னல்குமொரு - கோடிசிவ
           யோகிகட்குப் போன முவந்து சமைப்பாரைப்
           போகிகட்குப் புற்றனைய பொற்சடைமேல் - மோகிகட்குப்
220.       பூசனைக்கு வேண்டும் பொருளுதவு கின்றாரை
           வாசமலர் கொய்து வருவாரைப் - பூசனைசெய்
           கின்றாரை ஞானநூல் கேட்பாரை கைந்தோதா
           நின்றாரை மேனியெலாம் நீறணிந்து - குன்றாத
           கண்டி புனைந்து கமலா தனத்திருந்து
           கொண்டு சிவனைக் குறிப்பாரைக் - கண்டுருகிப்
           போற்றிவணங் காவுட் புகுந்து புரமெரித்த
           சீற்ற மறந்ததெய்வ சிங்கத்தை - மாற்றலரும்
           சீமானை யென்றுந் தெவிட்டாத தெள்ளமுதைக்
           கோமானை ஞானக் குணக்குன்றைப்- பூமாரன்
225.          வண்டு படாத மலரைநாஞ் செய்தவத்தால்
           கண்டுகொளுந் தண்ணறும்பூங் கற்பகத்தை - மண்டலமும்
           ஏனைப் புவனங்க ளெல்லாமும் வேண்டுபசுந்
           தேனைச் சிவஞான தேசிகனை - நீநெக்
           குருகியெதிர் கண்டுகொண்டே யோடிப் பெருமான்
           திருவடியில் வீழ்ந்தன்பு தேங்கிப் - பருகமுதே
           வேண்டுவார் வேண்டுவன வேண்டியவா றேயுதவும்
           ஆண்டகையே யெங்க ளரசனே - நீண்டவொரு
           தந்திதரு பச்சைபுனை தன்மையா னீண்டுபச்சைக்
           கந்த மரபிலுறுங் காரணனே - பந்தமற
230.       ஆளாய வன்பர்க் கமரா பதம்போல

216.215-220. துன்று-பொருந்து. இகலாத-மாறுபடாத. போனம்-உணவு.221.220-225. கண்டி-சிவகண்மணிமாலை. கமலாதனம்-பதுமாசனம். பூமாரன்-காமன். 226.225-230. நெக்குருகி-நெகிழ்ந்துருகி. பச்சைக்கந்த மரபு-பச்சைக்கந்த தேசிகா மரபு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்