| 19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
| |
மீளாத வீடுதவும் வித்தகனே - வேளாணை தள்ளு மடியார் தமக்குத் துணையாகக் கொள்ளு மிருமலர்த்தாட் குஞ்சரமே - விள்ளலறப் பத்திக் கடலுட் படிந்த வடியார்க்குத் தித்திக்குங் கோதிலாத் தேற ல் - முத்திக்குச் சாதியா லன்றுரிமை சாதனத்தா லென்றுண்மை போதியா நல்குமொரு பொன்மலையே நீதியால் வீடும் பொருளும் வெறுத்துமுத்தி வேண்டுவார் தேடுஞ் சிவஞான தேசிகனே - பாடும் 235. பொருளே யெனவணங்கிப் போற்றிநின்று நின்பே
|
|
| |
| |
ரருளே துணைவே றறியேன் - தெருளே நினது திருப்பவனி நேர்ந்தநாள் தொட்டுக் கனலின் மெழுகாய்க் கரையும் - புனல்பெருகு கண்ணொடு நின்றேங்குங் கங்குல் பகலின்றி உண்ண வுடுக்க வுவப்பொழியும் - பண்ணொடு பாடு நினைமெய் பதைக்க நினையெங்கும் தேடு முருகுந் திகைத்தலறும் - வாடுமெனைப் பாரானோ வென்னும் பரம சிவஞானி வாரானோ வென்னும் வழிபார்க்கும் -ஓரானோ 240. என்னோ யெனப்புலம்பு மென்னைநின்பாற் றூதாக
|
|
| |
| |
அன்னோ பலசெய் தஞரெய்துந் - தன்னோர் உடம்பும் பொறையா யொழிப்பக் கருதுங் குடும்பம் பகையாகக் கொள்ளும் - அடங்க ஒருபூ தருமில்லா துற்ற விடத்தே வருபூ ரணமா மருவி - ஒருபோதும் வேறிலா தொப்ப விரும்புறுமவ் வென்னுயிரை மாறிலா ஞான மணிவிளக்கே - ஈறிலாச் செல்வமே யெங்கள் சிவஞான தேவனே கல்விகொடு காணாத காட்சியே - புல்லுவாய் 245. புல்லு மளவு முனைவிட்டுப் போவதுநான்
|
|
| |
| |
இல்லை யிறைவனே யென்றநீ - தொல்லை விடய நினைந்தகன்று மீளாம னில்லா துடைய மலவிருளை யோட்டுஞ் - சுடரை மரமும் நிழலும் போன் மாழையும்பூ ணும்போல் இருமை யபேதமென்ப தென்றும் - பரமுயிர்கள் வேறென்றும் வேறல்ல வென்றும் விளம்புதலால் வீறொன்றும் தாதான் மியமென்றும் - மாறின்று சாமி யடிமையெனுஞ் சம்பந்த மென்றுமுளம் வேமிகலை யோர்மொழியில் வீப்பானைத் - தோமில் 250. உலகிற் கிறைவ னுபாதான மென்றும்
|
|
| |
|
| |
231.230-235. தேறல்-தேன். வீடும்-இல்லமும். 236.235-240. புனல் - நீர். கங்குல்-இரவு. உவப்பு-மகிழ்ச்சி. ஒரனோ-உணரானோ. 241.240-245. அஞர்-துன்பம். புல்லுவாய்-தழுவுவாய். 246.245-250. வீறு-பெருமை. வேம்-வேகும். வீப்பான்-அழிப்பவன். தோமில்-குற்றமற்ற.
|
|
|
|