1. சோணசைலமாலை |
|
|
கானமே மருவும் விலங்கினுங் கடையேன் கற்பவை கற்றிலேன் விடய ஞானமே யுடையே னறிஞரைக் காணி னாணிலே னுய்யுநா ளுளதோ வானமே யளவு நெடுங்கிரி மலய வாதமோ துறுபவர் கட்குத் தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(59) |
|
|
விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும் விதியினைக் கவளமுண் கெனவுங் கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து கடக்குமென் பவமொழிந் திடுமோ மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு மலிதரு புகையென வெழுந்து தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(60) |
|
|
வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரும் ஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற் றேவலே வாழ்வென வறிந்தேன் பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும் பாரவா சிகைமணி மேகஞ் சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(61) |
|
|
|
59. வாதம் ஓதுறுபவர்கட்குத் தானம் அளித்திட நெடுங்கிரிமலைய வளர்ந்தெழுஞ் சோணசைலன் என்க; வாதம் ஒதுறுபவர் பிரம விட்டுணுக்கள்; வாதம் மோதுறுபவர் எனப் பிரித்துத் தென்றலைத் தாக்கும் முனிவர் என்றலுமாம். 60.0, யானைபோல் விதியினை முனிந்து கடக்குமென்க. உண்க என்பதன்ஈறு தொக்கது. விழைவு-விருப்பம். சுளி-சினக்கின்ற. 61. பாத்திய மணி-தேர்ந்தெடுத்த நவமணி. வாசிகை-திருவாசிகை. மணி மேகம்-மணிகளைப் பொழியும் சம்வர்த்தம். வானவில் இம்மலை யிறைவனுக்குத் திருவாசிகைபோல் விளங்குகின்றதென்க.
|
|
|
|