1. சோணசைலமாலை |
|
|
குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங் குணத்தினிற் சிறந்தநல் விரத பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப் பரிவிலார் கதியிலா தவரே கலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த கன்னிநுண் ணிடைமிசைக் களபா சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(62) |
|
|
மூடக விருளோ டுன்னையின் றுண்ணா முலையர சாலகற் றுவலென் சூடரு மொழியா லடைந்தனன் றமியேன் சூள்வழு வாதுநீ யருளாய் வீடுறுங் கவரி கீழ்விழ வுறல்கார் மிசையனம் பன்றிதா மாறித் தாடலை துருவ வடைதனேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(63) |
|
|
ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த வாதர வுன்பதாம் புயத்தும் மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு வெண்டிரு நீற்றினும் வருமோ கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக் குழுக்கடோ ரணமென வெழுந்து தையலர் கடியப் பறந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(64) |
|
|
கனலினூ டமைத்த விழுதென வுருகக் கற்றதின் றுள்ளமென் கரங்கள் புனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை புரிந்தில வென்செய்கோ வுரையாய் சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ் சிலம்புக ணாணவுட் கொள்வோர் சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(65) |
|
|
|
62. கவர்தல்-வேட்கைப் பெருக்கம். கலத்தினிற் பொலிந்த கன்னியென முடிக்க. தனங்களுக்கு உறுதி கொடுத்தல், தம் வடிவங் குழைந்து அவைகட்குத் திண்மைபயத்தல். அலகில்-கணக்கில்லாத, கலம்-அணிகலம். களபாசலம்-களபமணிந்த கொங்கை, 63. அகவிருளோடு சூள்மொழி பகர்ந்தடைத்தனன் எனவும். கார்மிசையுறலெனவும் கொள்க. வீடுறல்-வழுவல். துருவ-தேட. 64. மாதர்கள் மேல்வைத்த அன்பு உன் திருவடியினிடமும், அவர்கள் மெய்க்கணுள்ள கலவைச்சாந்தின் மேல்வைத்த அவா நின் திரு நீற்றினிடமும் வருமோ என இரங்குவது காணத்தக்கது. மருங்குல்-இடை; நுண் என்பது நுண்ணிய. 65. மலைக்கண் நோயைப்போக்க மருந்து வகைகளுண்டு. ஆனால், சினத்துக்கும், பிறவிநோய்க்கும் அதனிடம் இல்லை. அதனால் “சிலம்புகள் நாண” என்றார். சிலம்பு என்பது மலை. இறைவனிடம் எல்லா நோய்கட்கும் மருந்துண்டு. இழுது-வெண்ணெய்; சனனம்-பிறவி; கனலினூடு என்பதில் ஊடு ஏழனுருபு.
|
|
|
|