முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ
      லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப்
பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப்
      பண்ணுமென் கண்ணுநண் ணுவையோ
வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும்
      வேழம்வீழ் குழிகளு நிரம்பத்
தாழுறு மருவி பொன்சொரி சோண
      சைலனே கைலைநா யகனே.
(66)
பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற்
      பணிநறுந் துகில்புனை மடவார்
மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும்
      வினையினே னுய்யுநா ளுளதோ
செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான்
      றிருமுடி கடப்பினு மூவர்
தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(67)

66. ஊழ்-வரிசை. வீழல்-விரும்பல். வாவல்-வௌவால் எயினர்-வேடர். 67. பை மறிப்படுப்பின்-பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் என்க. “பைம்மறியாப் பார்க்கப்படும்.” என்றார் பிறரும். பைம்மறிப்படுத்தி யென்னும் பாடத்திற்கு, பைம்மறி போலாக்கியெனக் கொள்க. கருந்தோல்-(அகத்துள்ள அசுத்தந்தோன்றாவாறு மேற்பொதிந்த) பெருந்தோல். இயல்-இயற்றமிழையும் நிறத்தையும்; செப்பு-சொல்லையும் சிமிழையும் உணர்த்தி நின்றது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்