1. சோணசைலமாலை |
|
|
சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந் துன்னுநல் லினமுநீத் தகன்றே இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி யென்னைநின் னடிமைசெய் தருள்வாய் முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற முழைதழற் றெனவுளம் வெருவித் தருக்கமொண் புலிசென் றுறமருள் சோண சைலனே கைலைநா யகனே.
|
(71) |
|
|
அந்தரி குமரி யஞ்சலி கௌரி யம்பிகை மனோன்மணி மதங்கி சுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின் துணைவியை வாழ்த்துமா றருளாய் வந்தரி சுருதி மருங்கினிற் பாட வயங்குதும் புருவுநா ரதனுந் தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே
|
(72) |
|
|
நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு நின்றிரு வடிமலர்க் கன்ப காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர் கணத்தினு ளெனைவிடுத் தருளாய் தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற் றென்றல்வந் தசைதொறு மெல்லத் தாக்குறு காந்த டுடுப்பலர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(73) |
|
|
|
71. ஐம்புலச் சுருக்கமும் மூதறிவு விரிவும் நல்லினந்துன்னலும் கயவரினம் நீத்தகன்றிருத்தலும் அருளி அடிமை கொள்க வென்பது. தழற்று-தழலை யுடையது. முருக்கும்-கொல்லும். அங்கதம்-பாம்பு. தருக்கும்-தருக்கையுடைய. 72. திருவருட் சத்தியானே தேவரீரையடைய வேண்டுதலின் அச்சத்தி வழிபாடும்அருள்கவென்பது. அரி-வண்டு. 73. காட்டுவபோல் தாக்குறு காந்தளென்க. நாழிகையை அறிந்து கோடற்கு அக்காலத்து வழங்கிய இயந்திரத்தைச் சுட்டி வர்ணித்தபடி; அன்றி, இக்காலத்து வழங்குவதேயெனின், தேன் கூடு கடிகாரக் கருவிக்கும், அதில் மெல்லத் தாக்குங் காந்தள் மொட்டு மெல்லப்புடை பெயரும் நிலைமுள்ளுக்கும், அம்மொட்டில் முறுக்குடைந்து விரியுந்தனியிதழ் விரைந்துலவு முள்ளுக்கும், தாக்குதலோசை ஒலிக்கும் உவமித்ததென்க. இறால்-தேனடை. கண்ணல்-நாழிகை.
|
|
|
|