முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
பவமிலே மினியா மென்றிறு மாந்து
      பயமற வியந்திடப் பத்தி
நவமிலே மடியே மென்செய்வா னிருந்து
      நாளினை வறிதொழிக் கின்றேம்
அவமிலே மிமையா விழியினாற் காண்கை
      யால்வலங் கொளவடி நிலந்தோய்
தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(74)
கண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே
      கைகணிற் றொழுபவே செவிகள்
பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே
      பதநினை வலம்புரி வனவே
எண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா
      விருந்துசென் றிருள்கவர் வனபோல்
தண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(75)
நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று
      நேரிழை யவர்விழைந் திடுவோர்
குணந்திரி தளிரின் மடியவே கண்டுங்
      கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன்
மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர்
      வார்கழ றுவக்கிட வலம்போய்த்
தணந்திடு மமயத் தறிந்துநாண் சோண
      சைலனே கைலைநா யகனே.
(76)

74. பத்திநவம்-பத்தியாகிய புதுமை. கடவுளை இமையா விழியாற் காணலும் கால் நிலந்தோய வலம் வருதலுமே தவமும் அவை பெறாமையே அவமுமாதல் குறிப்பித்தவாறு. 75. இருட்செறிவுபோலும் கரடியினிறந் தோன்றாதபடி மணி கதிர்பரப்புமென்க. கான்றிடும்-வெளிப்படுத்தும். 76. குணம்-தன்மை. இவ்வாழ்வெனச் சுட்டுவருவிக்க. சிலம்புங் கழலுந் துவக்குண்டது முன்னரறியாமை சனநெருக்கத்தாலென்க. கழல்-அரவின் படம் போலமைந்து கொக்கி போன்றிருத்தலின் துவக்குங் கருவியாயிற்று, தணந்திடும் அமயம்-வலம்புரிதலில் இருந்து பிரிகிறசமயம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்