| 1. சோணசைலமாலை |
|
| |
மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள் வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண் காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக் கன்னியர்ப் புகழ்வினை யறுமோ பூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண் பொறியர வின்றிமா தவர்க்குச் சாந்துய ரகற்று மருந்தருள் சோண சைலனே கைலைநா யகனே.
|
(77) |
| |
| |
சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு செவிகளுஞ் செவிடுபட் டைம்மேல் உந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ முளங்கொளும் பரிசெனக் கருளாய் மந்தர சைலந் தருவிடங் களத்து வைத்திடத் தினிலிம சைலந் தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(78) |
| |
|
| |
77. கவற்று-வருத்து; வகிர்-பிளப்பு; பொரு-இங்கு உவம உருபு; மாதவர்-சிறந்த தவமுடையவர்கள். 78. ஐ என்பது கபம், கோழையுமாம். மரணத்துன்பமாவது சிந்தை கலங்கல், இருவிழியும் இருளல், செவிகள் செவிடுபடல், கபங்கட்டல் முதலியன. இது “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி, யறிவழிந்திட்டு ஐமேலுந்தி” என்பதனாலும் அறிக. அமுதை-இங்கு, உமையை.
|
|
|
|
|