முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
நயங்கொளு மலரா னின்றிரு வடியை
      நாடொறு முயிருணுங் கூற்றம்
பயங்கொள வகலா தருச்சனை புரிந்து
      பரகதி யடையுநா ளுளதோ
வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து
      வானநா டாண்டிட மதிப்போர்
சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண
      சைலனே கைலைநா யகனே,
(79)
பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர்
      பெருங்கல்வீழ் பாசியி னிமையோர்
சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற்
      றீயனே னணையுநா ளுளதோ
அரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே
      லமர்த்தகட் கிரிமக ளிணைக்குஞ்
சரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(80)
காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க்
      கதியிடைப் புகவிடுத் திடினும்
பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின்
      பதமல ரன்றிவே றுளதோ
வாமரை பொருந்து முலகுள குவட்டு
      மலைகள்போ லாதுணா முலையாந்
தாமரை பொருந்து மானுள்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(81)
தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந்
      துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப்
படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற்
      பகட்டுமா மறலியை வெருவேன்
மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து
      மருவலர் வேங்கைமீ தகவத்
தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(82)
நிந்தியா துடல முழுதுநீ றணிய
      நேசியா தமலவைந் தெழுத்துஞ்
சிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென்
      செய்யுமோ வறிந்திலேன் றமியேன்
வந்தியா வரவ மன்றிடைக் கண்ட
      மலர்சிலம் படியைமண் ணுணிபோய்ச்
சந்தியா தயர வொளித்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(83)

79. வானநாடு-ஈண்டு முத்தியுலகம். வயம்-வெற்றி;வலிமையுமாம். சயம்-வெற்றி, நயம்-நல்ல. 80. பாசிபோலொதுங்கி நெருங்குமவையென்க. அமர்த்தல்-பொருதல். அரம்பொர-அரமானது தேய்க்க. மற்ற மலைகளில் யானைகள் மோதிப் போர் செய்ய இவ் வண்ணாமலையை உமையவள் கொங்கை யானைகள் மோதிப்போர் செய்கின்றன என்க. 81. உண்ணாமுலைகளென்னுந் தாமரையரும்புகளைக் கொண்டமான்-உண்ணாமுலையம்மையார். “உண்ணாமுலையாடாமரை பொருந்துமான்” என்பது பாடமேல் உண்ணாமுலையம்மை யாரது முகத் தாமரையிலுள்ள கண்களாகிய மான்கள் என்க. பாமரன்-அறிவற்றவன். இருள்-நிரயம். வாம் மரை-தாவுகிற மான்கள். 82. ஐந்தெழுத்தும் எனது திடம் பெற்ற மனத்திலிருக்கையால் மறலியை வெருவேன் என்பது. அகவல்-கூவல். 83. அரவம்-பதஞ்சலி முனிவர்; மண் உணி-உலகங்களையுண்ட திருமால். அரவங்கண்ட அடியை மண்ணுணியென்னும் பாம்பு காணாதயர வென்பதோர் நயமுங்காண்க. வந்தியா-வந்தனஞ்செய்து.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்