முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு
      மதர்விழிக் கடலினு மளகக்
கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக்
      கதியிடை நடத்துமா றெளிதோ
செங்கதிர் காலை மாலையுந் தங்கச்
      சிலம்புள வெனக்கடும் பகலில்
தங்குற நீடி நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(84)
கண்டிகைக் கலனே கலனென விழைந்து
      காயமே லணிந்துவெண் ணீற்றுப்
புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான்
      பூசனை புரியுமா றருளாய்
முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு
      முடிமிசை முத்துமேற் கட்டித்
தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(85)
நாவினைந் தெழுத்து மந்திர மலாத
      நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப்
பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும்
      பாமரர் தமையுமென் றொழிவேன்.
கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த
      குன்றமம் பாடகக் குன்றந்
தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(86)

84. குவடு-மலையுச்சி. அளகம்-கூந்தல்; கதி-வழி, இங்கு முத்தி. கடும்பகல்-உச்சிப்போது. 85. கண்டிகை என்பது கண்மணி; இதை உருத்திராக்கம் அல்லது உருத்திராட்சம் என்பர். இதைச் சிவனடியார்கள் கழுத்தில் அணிந்திருப்பர். முண்டகம்-தாமரை. 86. கோவினம்-ஆனிரை, ஆடகம்-பொன். இதைச்சொர்னம் என்பர். ஐந்தெழுத்தோதாதவரையும், மக்களைப்பாடுகின்றவர்க-ளையும் விட்டகலவேண்டும் என்பது கருத்து. தாவில்-கெடுதலற்ற.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்