| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
வந்து நம்புகழ் பாடுநர் தமையெலா மருவுடம் பிறுதிக்கண் மாசற் றெங்கணு நிறைசிவ மாக்கியே வைத்திடுஞ் செயலன்றி நந்து கின்றவோர் பதத்தினுண் மறுமையி னணுகுறும் படியுய்த்த னமக்க டாதென விம்மையே வண்டிமிர் நனைகவுட் பகையாற்றல் சிந்தும் வன்மருப் பெறுழ்வலிப் புகர்முகச் சிறுவிழிப் பெருவேழச் செல்வ விந்திர னாக்குத லுடையவண் செழுமணித் தரளங்கள் உந்தும் வெள்ளரு வித்திரு மயிலைய னுருட்டுக சிறுதேரே யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.
|
(10) |
| |
|
| |
10. நந்துகின்ற-கெடுகின்ற. நணுகுறும்படி-அடையுமாறு. வண்டு இமிர்-வண்டுகள் ஒலிக்கின்ற. நனைகவுள்-மதத்தால் நனைந்த கன்னம். பேருவேழம்-ஐராவத யானை.
|
|
|
|