22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
|
கொடுமிடி கெடவரு கொடைபடு நடையினை சடையொடு நதிபணி தவழ்மதி யொருவினை. |
|
|
|
மறையறை முறையற மறமற வருளினை பொறிநெறி மறுகுறு புலனிலை யலகிலை. |
|
|
|
அரிகரி பகையிகு மணிமணி மயிலையை வரியரி மதர்விழி மலைமக ணகரினை.
இவை மூன்றும் ஈரடியராகம் |
|
|
|
முன்னாளி லொருஞான முளையயின்ற வாரமுதம் எந்நாளு முண்கின்றா யாரேநின் னளவறிவார். |
|
|
|
நவத்தமிழ்வே தம்புகலு நன்மொழியிங் குண்மைபெறத் தவத்தொடுதா னஞ்செயுமோர் தன்மையுனக் கலதுண்டோ. |
|
|
|
வசைகெ டுத்தனை, இசைகொ டுத்தனை, செயலொ ழித்தனை, மயல ழித்தனை, யறம்வி ரித்தனை, மறமி ரித்தனை, விழைவ றுத்தனை, பிழைபொ றுத்தனை.
இவையெட்டும் இருசீரோரடியம்போதரங்கம் எனவாங்கு இதுதனிச்சொல் |
|
|
|
இருப்பம்பு பட்டுருவ வெய்தாலுந் தளராமல் கருப்பம்பு படாவண்ணங் காப்பவர்க்குத் துணைநீயே. |
|
|
|
கருமேனி யொழிந்தடியேங் கதிகாண நீயருளால் திருமேனி கொண்டிருந்து செய்ந்நன்றி மறப்பேமோ. |
|
|
|
தவப்பிணிக்கு மூலமலந் தான்மூல மாய்க்கிளைக்கும் பவப்பிணிக்கு மருந்துனது பார்வையே தானன்றோ.
இவையாறும் ஈரடித்தாழிசை |
|
|
|
வாத மாற்று நீ, போத மாற்று நீ, வாய்மை யாக்கு நீ, தீமை போக்கு நீ.
இவை நான்கும் முச்சீரோரடியம்போதரங்கம் |
|
|
|
மெய்யிலே பொய்தோன்றி மெய்யாக மயக்குறுமப் பொய்யிலே பொய்தோன்றப் புகலுமுனைப் புகல்வார்யார். |
|
|
|
|
மிடி-வறுமை. நதி, பணி தவழ்மதி ஒருவினை-ஆறு, பாம்பு, திங்கள்கள் ஆகியவைகளை நீக்கிவிட்டாய். பொறிநெறி-புலன் வழி. மறுகுறு-வருத்தத்தையடையும், அரிகரி பகையிகு-சிங்கமும் யானையும் பகை நீங்கியிருக்கும். மதர் விழி-களிப்புப் பொருந்திய கண்கள். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால். வசை-பழிப்பு. மறம் இரித்தனை-தீமையைப் போக்கினாய். விழைவு-விருப்பம். இருப்பு அம்பு-இரும்பினாலாகிய கணை. கருப்ப அம்பு-கருப்பமாகிய வருதத்தைச் செய்யும் அம்பு. கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால்.
|
|
|
|