முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வலந்திரி கதிர்கா ணுலகின ரெல்லாம்
       வந்துகேட் பனவிலை யெனாத
நலந்தரு மொருநீ தமியனேன் கேட்ப
       நானல திலையெனத் திருவாய்
மலர்ந்துரை செய்த தென்கொலோ வறியேன்
       மயிலைமால் வரைமணி விளக்கே
புலந்தெறு வீரர் பெருமவென் றிறைஞ்சிப்
       புகழ்சிவ ஞானதே சிகனே.
(5)
கலிவிருத்தம்
சிகரியி னெழுதின மணியின் றேர்ப்பரிக்
கிகலிர வுளதுகொ லிருவி னைத்தொடர்
நிகரறு நினையடை நிலையி னோர்க்கிலை
நகரியி னமர்சிவ ஞான தேவனே.
(6)
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு மற்றை யோரும்
மேவரு நிலைய ராக வினையினேற் கருள்பு ரிந்தான்
மூவரு மிறைஞ்சு ஞான முதல்வனெண் மயிலை மேவி
யாவரும் விழையும் வான மிலான்புலம் பொழியு மாறே.
(7)

5. வலந்திரி கதிர்-வலமாகச் சுற்று தலைச் செய்யுங் கதிரவன். நானலது இலை-என்னையல்லாது பிறிதொன்றுமில்லை யென்று மெய்யறிவைப் போதித்தவாறு; இதனால் ஆசிரியர் தாம் மெய்யறிவு பெற்றமையைப் புலப்படுத்தினார். புலம்தெறு-ஐம்புலன்களை வென்ற. 6. இருவினைத் தொடர்-பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய நல்வினை தீவினையாகியவைகளின் தொடர்ச்சிகள். நிகர் அறு-மெய்யறிவினால் இணையற்ற. 7. மேவரு நிலையராக-அடையமுடியாத தன்மையை உடையவர்களாக. விழையும்-விரும்பும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்