| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
மறிமறைத் தாலு மழுமறைத் தாலு மணிமிடற்றின் குறிமறைத் தாலு மதிமறைத் தாலுமென் கொன்றைமலர் வெறிமறைத் தாலு மறிவே னுனைமதன் மேற்பகைமை நெறிமறைத் தாயிலை யேசிவ ஞான நெடுந்தகையே.
|
(18) |
| |
| அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
நெடுமடைக்கட் குடவளைசென் றடைப்பவிள வரானுழைந்து நீர்செ லுத்துந் தடமுடைத்தண் பணைமருதக் கச்சிநகர்ச் சிவஞானத் தம்பி ரானே படமுடிப்பார் மிசைநினது புகழ்பாடிப் பன்மலர்தூய்ப் பணிகின் றேற்குக் குடமுடைத்தா லெனப்பாசங் கெடுப்பதல்லா லெனக்குநீ கொடுப்ப தென்னே.
|
(19) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
என்ன தவவுதவி யீதென் றுணர்கிலேன் மன்னுசிவ ஞானமுனி வந்துற்றான் - தன்னைநிகர் மாசங் கெடுக்கு மலர்த்தடஞ்சூழ் கச்சியிலெம் பாசங் கெடுக்கும் படி.
|
(20) |
| |
|
| |
18. மறி-மான். மிடற்றின்குறி-கண்டத்தில் அமைந்த நஞ்சுக் கறை. வெறி-மணம். பகைமை நெறி-பகையாந்தன்மையை. நெடுந்தகை-மிகுந்த பெருமையுடையவன். 19. குடவளை-குடம்போன்ற சங்கு. படமுடிப் பார் மிசை-ஆதிசேடப் பாம்பின் முடிமீதுள்ள உலகத்தின்கண். 20. என்ன தவ உதவி-எக் காலத்திலே செய்த தவத்தின் பலன். மாசு அங்கு எடுக்கும்-குற்றத்தை அவ்விடத்திலே நீக்கும்.
|
|
|
|