| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
படிக்குப் பெருஞ்செல்வ மாஞ்சிவ ஞானிமெய்ப் பத்தர்மணி முடிக்குப் பெருஞ்செல்வ மாம்பதத் தானொடு முன்னியெங்கள் மிடிக்குப் பெருஞ்செல்வ மென்றில ரேதரை வேந்தரொடெங் குடிக்குப் பெருஞ்செல்வ மென்றுசென் றோதுறுங் கோளர்களே.
|
(21) |
| |
| கலிவிருத்தம் |
| |
| |
கோள்வலி செய்வதென் கொடிய வாகிய நாள்வலி செய்வதெ னம்மைக் கூற்றெனும் ஆள்வலி செய்வதெ னமுது பானிதன் தாள்வலி யவைகொலுந் தண்டு தொண்டரே.
|
(22) |
| |
| அம்மானை, மடக்கு, கலித்தாழிசை |
| |
| |
தொண்டர்நெஞ்ச வஞ்சந் தொலைக்குஞ் சிவஞானி அண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணல்கா ணம்மானை அண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணலே யாமாகில் கண்டநஞ்சங் கண்டிலநங் கண்ணினா லம்மானை காணோ மயிலைவரைக் கண்டக்கா லம்மானை.
|
(23) |
| |
| கலிவிருத்தம் |
| |
| |
அம்மா சிவஞா னியடிக் கமலம் மும்மா யைகடந் துமுயங் குமது சும்மா தலைமீ துசுமத் தினனால் கைம்மா றுளதோ கடையே னிடையே.
|
(24) |
| |
|
| |
21. படிக்கு-உலகத்துக்கு. மிடிக்கு-வறுமைக்கு. தரைவேந்தர்-உலக மன்னர்கள். கோளர்கள்-இழிந்தகுணமுடையவர்கள். 22. கோள்-ஒன்பான் வகைக் கோள்கள். வலி-துன்பம். தாள் வலி-திருவடியின் ஆற்றல். 23. அண்டர்-தேவர்கள். கண்ட நஞ்சம்-கழுத்திலுள்ள நஞ்சுக் கறை. 24. மும்மாயை-ஆணவம், மாயை, காமியம். சுமத்தினன்-வைத்தருளினான்.
|
|
|
|