முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கலிவிருத்தம்
உற்பவ நிற்ப தொடுக்க மளிக்கும்
சிற்பரன் மெய்ச்சிவ ஞானி திருக்கை
நற்பிர சாத மலர்ப்பத நம்பால்
சொற்பெறு மூவர் தொழிற்புண ராவே.
(29)
கட்டளைக்கலித்துறை
வேதந் தெளிந்தநின் செவ்வாய் மொழிநின் விரைமலர்ப்பூம்
பாதம் படுதுக ளெங்குல தேவதை பார்வையெங்கள்
சாதங் களையு மருந்துநின் னாமந் தனிக்குடிலை
நாதன் கயிலை சிவஞானி நீயமர் நல்லிடமே.
(30)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நல்ல புலவர் பழிச்சுசிவ ஞானி யெனமோர் நாமமுறும்
மல்லன் மயிலை மலையனைவே றொருவ னாக மதிக்கிலேன்
மெல்ல வொருபூ வீசு தன்முன் வேளை யெரித்த தான்வெகுளி
இல்ல னெனினும் பொறையுளன்போற் றோன்றா னெனினும் யான்றானே.
(31)
நேரிசைவெண்பா
யானென தென்னு மிவைகழன்று வந்துசிவ
ஞான குருவை நணுகிலா - மானுடர்தம்
பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத்
தெல்லாக் கடவுளரு மின்று.
(32)

29. உற்பவம்-தோற்றம். ஒடுக்கம்-மறைவு. சொற்பெறு-புகழ்ச் சொல்லைப் பெறுகிற. 30. வேதம் தெளிந்த-மறைப் பொருள்களைத் தெளிவாக உணர்ந்த. துகள்-தூள். சாதங்களையும்-பிறப்புக்களைப் போக்கும். 31. பழிச்சு-போற்றுகிற. மல்லல்-வளப்பம் பொருந்திய. ஒரு பூ வீசுதல் முன்-ஒரு மலர்க்கணையைச் செலுத்துவதற்கு முன். 32. கழன்று-நீங்கி. நணுகிலா-நண்ணாத.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்