முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
வண்டுவிடுதூது, இன்னிசைக்கொச்சகக்கலிப்பா
இன்றுபிழை யொன்று மியற்றா வெனைமுனிந்து
நின்று சிறிதுமரு ணெஞ்சுறா வின்மதனைக்
கொன்றுவிடி லில்லைக் கொலைப்பாவ மென்றளிதாள்
சென்றுபுக லீர்நஞ் சிவஞான தேசிகர்க்கே.
(33)
கலிவிருத்தம்
கேடு தீர்மயி லைக்கிரி ஞானியைத்
தேடு வார்சிலர் செய்யுங் கருமியை
நாடு வார்பலர் நன்மணி யோகடைக்
கோடு வீழ்மணி யோபலர் கொள்வதே.
(34)
சித்து, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
கொள்ளிபோன் மணித்தலைநா கங்கிடக்கு மயிலைமலைக்
       குகையில் வாழுந்
தெள்ளுவா னமுதனைய சிவஞானி பதம்பரவுஞ்
       சித்தர் நாங்காண்
அள்ளியோர் பிடிசோறு தரிற்பத்தா நாமுனக்கிங்
       கைய மின்றி
வெள்ளிதான் வருவதன்முன் பொன்னாக்கு வோமிதுநம்
       வித்தை தானே.
(35)
நேரிசைவெண்பா
வித்தை சிவஞானி வித்தையே காண்பவெலாம்
மித்தையென நின்று விளம்பியே - சத்தியமாய்
நாட்டினா னீ தானு நானே யெனப்புகன்று
காட்டினான் றன்னையே காண்.
(36)

33. முனிந்து நின்று-சினந்து. அளிகாள்-வண்டுகளே! 34. கேடுதீர்-தீமையில்லாத. 35. தெள்ளுவான் அமுதனைய-தெளிந்த அமுதத்தைப் போன்ற. அள்ளி ஒரு பிடி சோறு தந்தால், அதற்குமாறாகப் பத்து மடங்கு பயன் சேர வெள்ளியைக் காண்பதன் முன் பொன்னாமாறு செய்து தருவோம், என்பது பின்னிரண்டடிகளின் பொருள். வெள்ளி-வெள்ளிக்கிழமை; பொன்-வியாழக்கிழமை. 36. மிந்தை-பொய்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்