| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| பிச்சியார். கலிநிலைத்துறை |
| |
| |
தாமே மனிதர் தமதா மயிலைத் தனிஞானி பூமேன் மனிதக் கோல மடைந்து புறப்பட்டான் மாமேன் மையரா கியமா தவர்தவம் வௌவற்குக் கோமே தகமே நீதவ வேடங் கொண்டாயே.
|
(68) |
| |
| அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
கொண்டசிலை மரமுதலா யினதமைத்தாஞ் சிவமெனவே குறிக்க மாட்டார் அண்டர்முத லாயினோர் பாவிக்கப் படுமயிலை யமர்ந்திட் டெம்மைத் தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே சிவோகமெனத் துணிந்து கொண்டு பண்டைநரர் பவமுழுதுந் தொலைத்திடுவ னியாரதிகம் பார்த்தி டீரே.
|
(69) |
| |
|
| |
68. பூமேல்-உலகத்தில். மாமேன்மை-சிறந்த பெருமை. வௌவல்-பற்றுதல். 69. அண்டர்-தேவர். பாவிக்கப்படும்-போற்றப்படும். பண்டைநரர்-நெடுங்காலமாகப் பிறவியையடைந்து வருந்தும் மனிதர்கள். பவம்-பிறப்பு.
|
|
|
|