| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| வஞ்சிவிருத்தம் |
| |
| |
இரந்து நிற்றலி லாமையுங் கரந்து நிற்றல்க லாமையும் பொருந்து நிற்புகழ் வேனியான் திருந்து மெய்ச்சிவ ஞானியே.
|
(78) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
ஞானியஞ் ஞானியெனல் ஞானசம் பந்தனெனுந் தானிமணப் பந்தர்க்குத் தப்பியுழல் - மானுடர்காள் நில்லாமல் வம்மினோ நின்றசிவ ஞானிபதம் எல்லாம் வழங்குகின்றா னின்று.
|
(79) |
| |
| அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
இன்றுவர்வாய் மகளிர்மய லுறாதென்று மெனைத்தடுத்தா ளிசையக் கொண்டாய் வென்றிமலி துறவியா தலினீயம் மாதொருபால் விழைந்து வைத்தோன் முன்றமர்செய் மணம்விலக்கி வலிந்தாட்கொண் டிருமாதர் மோக வேலை யன்றமிழ நம்பியைச்செய் தனன்சிவஞா னிப்பெரும்பே ரடைந்து ளோயே.
|
(80) |
| |
| எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
அடையாத புல்ல ரினமோ டிணங்க வடியேனை விட்ட வொருநீ கிடையாத நின்னை யுறமன்பர் தங்கள் கிளையோ டிணங்க வருள்வாய் திடையாக நாளி னடியான் முனிந்த சிவஞான தேவ மதியைச் சடையா லணிந்த வவன்வே றியார்கொ றலைவா வெனக்கு மொழியே.
|
(81) |
| |
|
| |
78. கரந்து நிற்றல்-மறைந்திருத்தல். 79. மணப் பந்தர்க்குத் தப்பி-திருஞானசம்பந்தருடைய திருமண விழாவில் வீடுபேற்றையடைவதற்குத் தவறி. உழல்-பிறப்பிறப்பில் உழலுகின்ற. வம்மின்-வருவீர்களாக. 80. துவர்வாய்-பவழம் போன்ற வாய். வென்றிமலி-வெற்றி மிகுந்த. தமர்-உறவினர். மணம் விலக்கி-சுந்தரர் திருமணத்தைத் தடுத்து. இருமாதர்-பரவையார், சங்கிலியார். மோகவேலை-காமக்கடல். 81. கிடையாத-அடைதற்கரிய.
|
|
|
|