23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
அருளிச்செய்த
இட்டலிங்க வகவல் நேரிசையாசிரியப்பா |
|
|
விரிகட லாடைப் பெருநில மடந்தைக் கரும்பெற லாரம் புரைந்தினி தொழுகும் பொருதிரைப் பொன்னித் திருவரங் கத்துப் புதுவெயி லெறிக்குங் கதிர்மணி சுமந்த 5. ஆயிரஞ் சுடிகை மாயிரும் பாந்தட்
|
(1) |
|
|
பள்ளி மீமிசை யொள்ளொளி மின்னொடு கருமழை கிடந்த காட்சி போலப் பிறைநுதற் றிருவோ டறிதுயி லமர்ந்த புரிவளைத் தடக்கைப் பெரியோன் றானும் 10. மலர்தலை யுலகம் பலவும் பயந்து
|
(2) |
|
|
தெய்வத் தாமரைத் திருத்தவி சிருக்கும் அசைவில் காட்சித் திசைமுகத் தொருவனும் ஈண்டிதன் னடியுஞ் சேண்டொடு முடியுந் தனித்தனிக் காண்குது மெனத்தமி லிசையா 15. இலங்குபிறை மருப்பின் விலங்குரு வெடுத்து
|
(3) |
|
|
நெடுநிலங் கிளையா வுடன்மிகத் தளர்ந்தும் நிறைமதி நிறத்துப் பறவையுருப் பரித்து வானகம் பறந்து மேனிநொந் திளைத்துங் காண்டல் செல்லா தியாண்டுபல கழிய 20. மண்டழற் பிழம்பாய்ப் பண்டு நின்றோன்
|
(4) |
|
|
|
1. புரைந்து-ஒத்து. பொருதிரை-கரையை மோதுகிற திரை. பொன்னி-காவிரி. 5. சுடிகை-உச்சிக் கொண்டை. மாஇரும்-மிகப்பெரும். பாந்தள்-ஆதிசேடன். 2. கருமழை-கரிய முகில். 8. திரு-திருமகள். அறிதுயில்-எல்லாவற்றையும் உணரத்தக்க மெய்யறிவுத்தூக்கம். 9. வளை-சங்கு. பெரியோன்-திருமால். 10. பயந்து-பெற்று. 3. தவிசு-இருக்கை. திசைமுகத்தொருவன்-நான்முகன். 13. சேண்-மிகவுயர்ந்த விண். 15. விலங்குரு-பன்றி வடிவம். 4. கிளையா-தோண்டி. 17. பறவையுரு-அன்ன வடிவம். பரித்து-தாங்கி. 19. காண்டல் செல்லாது-காண முடியாமல். 20. மண்டு-மிகுதியான.
|
|
|
|