| 23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
| |
முத்தலைச் சூலமும் வைத்தகைத் தலத்தோன் வான்றோய் செக்கரிற் றோன்றுபிறை யென்னப் பொன்வரைக் குவடு தன்வயிற் றுரிஞ்ச மேனிவந் தோங்கிய வெஞ்சினக் கேழலின் 50 கோடுகிடந் திமைக்கும் பீடுகெழு மார்போன்
|
(10) |
| |
| |
பிறையுகிர் நோன்றாட் பொறியுடற் பேழ்வாய் உறுவலிப் புலியி னுரியுடை யுடீஇத் துத்திப் பைத்தலைச் சுடர்மணிச் சூட்டுக் கடுவொடுங் கெயிற்றுநாண் கட்டிய வரையோன் 55 திருகுவெஞ் சினத்தி னுருகெழு தோற்றத்
|
(11) |
| |
| |
தெறுழ்வலித் தடந்தோட் டறுகட் கூற்றம் ஊழியி லெழுதரு முறுவளி சாய்த்த நீனிறக் குன்றம் போன்மெனச் சாய ஒருசிறிது நிமிர்ந்த முருகுவிரி கமலத் 60 தலர்நலங் கவற்று மறைகழ லடியோன்
|
(12) |
| |
| |
வெள்ளி மால்வரை துள்ளிநடந் தன்ன கடுநடைச் செங்கண் விடைவல னுயர்த்தோன் இமய மீன்ற வமையுறழ் தடந்தோட் கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைக் குவிமுலைக் 65 கருங்குழற் பிறைநுதன் முருந்திள முறுவல்
|
(13) |
| |
| |
திங்கள் வாண்முகப் பொங்கர வல்குல் தளிர்புரை மெல்லடி விளரியந் தீஞ்சொல் கயல்புரை யரிக்கட் கருணையங் கருங்கடல் இனிதுவீற் றிருக்கு மிடமருங் குடையோன் 70 இன்னண மிருப்பினுந் தன்னிலை யெவர்க்கும்
|
(14) |
| |
| |
இற்றெனக் கிளக்கும் பெற்றிய னல்லோன் பெறுதலு மிழத்தலும் பிரிதலும் புணர்தலும் ஊணு முறக்கமு மூக்கமு மடிமையும் பிணியு மச்சமும் பிறபல குணனுந் 75 தோற்றமும் பருவமுந் தொலைவு மில்லோன்
|
(15) |
| |
|
| |
10. பொன்வரைக்குவடு-மேருமலை உச்சி. 49. கேழல்-பன்றி. 50. கோடு-கொம்பு. பீடுகெழு-பெருமை பொருந்திய.11. உகிர்-நகம். நோன்றாள்-வலிய தாள். பொறி-புள்ளி. 52. உரியுடை-தோலாடை. உடீஇ-உடுத்து. 53. துத்தி-படப்பொறி. 54. கடு-நஞ்சு. நாண்-அரைக்கச்சு. 55. திருகு-மாறுபட்ட. 12. எறுழ்வலி-மிகுந்த வலி. 57. ஊழி-உலக முடிவுக்காலம். உறுவளி-பெருங்காற்று. 58. நீல் நிறக்குன்றம்-கரிய நிறமுடைய மலை. 59. முருகுவிரி-மணம் வெளிப்படும். 60. கவற்றும்-கவலச் செய்யும். 13. விடை-விடைக்கொடி. 63. அமைஉறழ்-மூங்கிலையொத்த. 65. முருந்திள முறுவல்-மயிலிறகினடி போன்ற இளம்பற்கள். 14. விளரி-விளரிப்பண்ணைப் போன்ற. 68. அரிக்கண்-ரேகை பொருந்திய கண். கருணையங் கருங்கடல்-உமாதேவி. 69. இடமருங்கு-இடப்பக்கம். 70. இன்னணம்-இவ்வாறு. 15. இற்று-இத்தன்மைத்து. கிளக்கும்-கூறும். பெற்றியன்-பெருமையை உடையவன். 73. மடிமை-சோம்பல்.
|
|
|
|