முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         சங்கர னமலன் றாணு சதாசிவன்
         முழுதொருங் குணர்ந்தோன் முன்னோன் றலைவன்
         தன்னருட் பெருமைக் குன்னரும் பிறவிக்
         கழிபெருந் துன்பமுற் றுழிதரு வோரை
80       ஈர்த்தாட் கோட லியற்கை யாகலின்
(16)
         உடலெனப் பெயரிய விடலருஞ் சிறைப்பட்
         டாரஞர் மூன்று மானா தருந்தும்
         என்னையு மாளத் தன்னுளத் தெண்ணி
         மனமொழி மெய்களின் மருவரு மொருதான்
85       கருங்கட லுடுத்த விருங்கண்ஞா லத்துக்
(17)
         குரவ னெனவோ ருருவொடு வந்து
         பெரிதுட் கிடந்த வருள்வெளிப் படுத்து
         நன்னர் நோக்கத் தென்னை நோக்கிய
         உலகம் விளக்கும் பலகதிர் பரப்பி
90       வாளர வென்னுமோர் தாளினிற் பூத்த
(18)
         அங்கண்மா ஞாலப் பங்கய மலர்க்குப்
         பொன்னிறக் கொட்டையாய்ப் பொலிந்துநின் றுயர்ந்த
         விண்டொடு குடுமி மேருவலந் திரியும்
         ஆழியொன் றுடைய வேழ்பரி நெடுந்தேர்ப்
95       பரிதி வானவன் பரவையிற் றோன்றப்
(19)
         பாயிரு டொலைத்துப் பகல்பிறந் தென்ன
         உள்ளிரு டுமித்தாங் கொளிசிறந் தன்றே-அவ்வழி
         அளியனுந் தற்பெறக் களிமிகுந் தினிதினே
         தன்னை யெனக்குத் தானீந் தருள்புரிந்
100      தென்னிடத் தொழிவின் றிருந்தனன் மன்னோ
(20)

16. ஈர்த்தாட்கோடல்-இழுத்து ஆட்கொள்ளுதல். 17. ஆரஞர்-பொருந்திய துன்பம். ஆனாது-அமையாமல். 84. மருவரும்-பொருந்துதற்கரிய. 18. குரவன்-ஆசான். 19. ஆழி-உருளை. 95. பரவை-கடல். 20. பாயிருள்-பரவிய இருள். 97. துமித்து-கெடுத்து. 98. அளியனும்-எளியேனும். 100. ஒழிவின்று-நீங்காமல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்