முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         தன்னடைந் தவரை யின்னலம் பிறவிப்
         பெருந்தளை யகற்றி யரும்பெற லின்பத்
         தொருதனி வீட்டுல குய்த்த லானுந்
         துஞ்சினோ ரென்பு தோய்த லானும்
105      ஊன்கெட வுடம்பு நோன்புழந் திமயம்
(21)
         ஈன்றகொம் பிடத்துத் தோன்றுத லானும்
         ஒப்புமை யின்றி யுயர்ந்தமை யானுந்
         தன்னை மானும் பன்னருஞ் சிறப்பிற்
         கங்கையென் றுரைக்குங் கடவுளா றுடுத்த
110      பேசரும் பெருமைக் காசியம் பதியும்
(22)
         கரைமிசை நின்ற விரிதலைத் தாழையின்
         பூங்குலை சிதறித் தாங்கரும் பெருங்காய்
         அழனிறத் தாமரை யலரிதழ் சிதர்ந்து
         பொன்னிறக் கொட்டை சின்னமுற் றிடவுஞ்
115      சேயிதழ் மலரினும் பாசடை யிடத்தும்
(23)
         இனிதிருந் தயர்வுயிர்த் திரைதேர் கமஞ்சூற்
         சங்கின மலறுபு சைவலத் தொளிப்பவுங்
         குரண்டமுங் கம்புளும் வெருண்ட நோக்கொடு
         தலைமீ தெடுத்தெடுத் தலைநீர் மூழ்கவும்
120      அஞ்சிறை யன்னமு மளியின் றொகுதியும்
(24)
         வெள்ளியம் புயலுங் கரிய மங்குலும்
         பரந்தன வெழுந்து கரந்தன விரியவும்
         விரிகதிர் ஞாயிற்றின் வெயில்பெற வேட்டுக்
         கோட்டருகு கிடந்த கூன்முது காமை
125       கைய தெறிந்தென வொய்யென வீழ்ந்து
(25)
         கீழ்நீர்ப் புகவுங் கிளர்பெருந் திரையெழுந்
         தோங்கிருங் கரைமிசைப் பாய்ந்தன புரளவுந்
         துடுமென வீழ்தரக் கடுவிசை வாள்புரை
         வாளை பாயுந் தாள தா மரைத்தடத்
130       தாடுநர் வீழ்த்த வவிரொளி மணிப்பூண்
(26)

21.01. இன்னல் அம்பிறவி-துன்பம் பொருந்திய அழகிய பிறப்பு. 102. தளை அகற்றி-விலங்கைப் போக்கி. 104. துஞ்சினோர்-இறந்தோர். 105. நோன்பு உழந்து-விரதங்களில் வருந்தி. இமயம்-இமயமலை. 22.07. ஒப்புமை-சமம். 108. பன்னரும்-சொல்லுதற்கரிய. 23.11. தாழை-தென்னையின்.113. அழனிறத்தாமரை-செந்தாமரை. சிதர்ந்து-சிதறி. 114. கொட்டை-தாமரையிலுள்ள தவிசு. சின்னமுற்றிட-பழுதடைய. 115. பாசடை-பசிய இலை. 24.16.கமம்சூல் சங்கினம்-நிறைந்த சூலையுடைய சங்குக் கூட்டம். 117. அலறுபு-அலறி. சைவலம்-பாசி. 118. குரண்டம்-நீர்க்காக்கை. கம்புள்-சம்பங்கோழி. 120. அளியின் தொகுதி-வண்டுகளின் கூட்டம். 25. வெள்ளியம்புயல்-வெள்ளியமுகில். மங்குல்-முகில். 123. வேட்டு-விரும்பி. 124. கோட்டருகு-கரையருகு. 26. துடுமென-திடீரென. வாள்புரை-வாளைப்போன்ற. 130. ஆடுநர்-நீராடுவோர். வீழ்த்த-போகட்டுவிட்ட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்