முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         நீர்க்கீழ்ப் படர்ந்த நெடுந்துகிர்க் கொடியென
         நனிகிடந் திமைக்கும் பனிபடு நறுமலர்
         மல்லலம் பசும்பொழிற் றில்லையம் பலமும்
         கவையடி வெடிவாற் குவிமுலை மேதி
135       மனையுழைக் கன்றை நினைதொறுஞ் சொரிந்த
(27)
         வெண்பா லருந்திய செங்கா லன்னந்
         தாமரைத் தவிசின் மீமிசை யுறங்குங்
         கண்ணகன் கழனி விண்ணக டுரிஞ்சு
         நொச்சிசூழ் கிடந்த கச்சிமா நகரமும்
140       தண்டளிர்க் கோட்டுப் பிண்டிமுதல் பெயர்த்து
(28)
         வெறிகமழ் சந்தனச் செறிவுகெட முருக்கி
         விண்புகு நெடுஞ்சினைச் சண்பகஞ் சாடிக்
         காழுடை யகிற்றிரள் வீழ்தர நூக்கி
         மங்குல்கண் படுக்குங் குங்குமஞ் சாய்த்து
145       மிளிர்மணி யருவிக் குளிர்புனன் முகந்து
(29)
         தூம்புடை நெடுங்கையிற் றூய்விளை யாடும்
         ஈர்ங்கவுட் புகர்முகக் கூர்ங்கோட் டுரற்கால்
         வெஞ்சினக் குஞ்சர மஞ்சுவரு நெஞ்சொடு
         பசுந்தழை பொதுளிய விசும்புற நிமிர்ந்து
150       வாரியுண் டெழுதரு மழையொடு முரணும்
(30)
         புதுவேய்ப் பொதும்பரிற் கதுமென வொளிக்க
         அடங்கருஞ் சினத்து முடங்குளை நோன்றாட்
         பெருவலி யரிமா னுருமென வதிர்க்கும்
         அணிகிள ரடுக்கத் தருணையங் கிரியும்
155       மணிவரன் றருவிவீழ் மல்லிகார்ச் சுனமும்
(31)

27. துகிர்க்கொடி-பவழக்கொடி. 132. பனிபடு-குளிர்ச்சி பொருந்திய. 133. மல்லல்-வளப்பம். 134. கவையடி-பிளவுபட்ட அடி. மேதி-எருமை. 135. மனையுழை-வீட்டிடத்துள்ள.28. நொச்சி-மதில். 140. கோடு-கிளை. பிண்டி-அசோகு. 29. வெறி-மணம். செறிவு-நெருக்கம். முருக்கி-அழித்து. 142. நெடுஞ்சினை-நீண்ட கிளை. 143. காழ்-வயிரம். நூக்கி-அழித்து. 144. மங்குல்-முகில். கண்படுக்கும்-உறங்கும். 30. தூம்பு-துளை. தூய்-தூவி. 147. ஈர்ங்கவுள்-மதத்தால் நனைந்த கன்னம். 148. குஞ்சரம்-யானை. 149. பொதுளிய-நெருங்கிய. 150. வாரி-கடல். மழை-முகில் . முரணும்-மாறுபடும். 31. பொதும்பர்-மரச்செறிவு. 153. உரும்என-இடியைப்போன்ற. 155. வரன்று அருவி-வாரிக்கொண்டு வரும் அருவி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்